விக்ரமை நம்பி சம்பளம் எல்லாம் தர முடியாது!.. அதிரடி நடவடிக்கை!.. வெங்கட் பிரபுவுக்கும் ஆப்பு?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் ஏவிஎம் உட்பட இருந்த இடமே தெரியாமல் காணாமல் போக காரணமே முன்னணி நடிகர்கள் ஓவர் பில்டப்பில் பெரிய சம்பளத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஃப்ளாப் படங்களை கொடுத்தது தான் என ரொம்பவே லேட்டாக லைகா வந்து திவால் ஆன பிறகே புரிந்துக் கொண்டனர்.
இதில், வேடிக்கை என்னவென்றால், கோலிவுட் நடிகர்களை நம்பி பணம் போட்ட பிற மாநில தயாரிப்பாளர்களும் சமீப காலமாக பட்டை நாமத்துடன் வலம் வருகின்ற்னர். இந்நிலையில், இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா என தயாரிப்பாளர்கள் சங்கத்தை கூட்டி இனிமேல் முன்னணி நடிகரா இரு பின்னணி பாடகியா இரு சம்பளம் எல்லாம் தர முடியாது லாபத்தில் பங்கு மட்டுமே என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.
சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்க சியான் விக்ரம் நடிக்கும் படத்துக்கு இதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் லாபத்தில் சியான் விக்ரமுக்கு 35 சதவீதம் ஷேர் என்கிற அடிப்படையில் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சியான் விக்ரம் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், வெற்றிப் பெற்றால் காசு, தோல்வி அடைந்தால் ஹீரோவுக்கும் லாஸ் என்கிற புதிய யுக்தியை தயாரிப்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.
ஹீரோவுக்கு மட்டுமின்றி இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட டைரக்டர்களுக்கும் இனிமேல் இதுதான் நிலைமை என்கின்றனர். கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுகிறேன் என உப்புமா படங்களை கொடுத்தால் அத்துடன் சம்பளமும் கிடைக்காது என்கிற நிலை உருவாகி விடுமாம்.
