நடிகர் சத்யராஜ் நான் சாமியை திட்டுவதால் தான் என் மனைவி கோமாவிற்கு சென்றுவிட்டார் என்று கூறியவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பிறகு வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிகச் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்பவர் நடிகர் சத்யராஜ். இவர் தற்போது வரை சினிமாவில் நடித்து அசத்தி வருகின்றார். ஹீரோவாக இல்லை என்றாலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார்.
இதையும் படிங்க: டைவர்ஸ் அவங்களுக்கு பரம்பரை வியாதி!.. விவாகரத்துக்கு முக்கிய காரணமே இதுதான்!.. பயில்வான் பளீர்!..
தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இவர் 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு சிபிராஜ் என்கின்ற மகனும், திவ்யா என்கின்ற மகளும் இருக்கிறார்கள்.
சிபிராஜ் தனது தந்தையை போலவே சினிமாவில் நடித்து வருகின்றார். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகின்றார். சத்யராஜின் மகள் சத்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் குறித்து கூறியிருந்தார். தனது தாய் மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதுடன் தனது தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருந்து தங்களை பார்த்துக் கொள்கின்றார் என்று கூறியிருந்தார்.

sathyaraj
இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் நடிகர் சத்யராஜை சிலர் விமர்சனமும் செய்து வந்தார்கள். நடிகர் சத்யராஜை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மேலும் பெரியாரை பின் தொடர்பவர் என்பதால் கடவுளை திட்டி பல மேடைகளில் பேசியிருக்கின்றார்.
இதனால் தான் அவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமை அவர் கோமாவிற்கு சென்று விட்டார் என்ற பல கமெண்ட்களை கூறி வந்தார்கள். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த சத்யராஜ் இது குறித்து பேசி இருந்தார். அந்த நிகழ்ச்சியை பேட்டி எடுத்த தொகுப்பாளர் உங்கள் மனைவிக்கு இப்படி ஆனதற்கு நீங்கள் கடவுளை திட்டியது தான் காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள் என்று கேட்டார்.
இதையும் படிங்க: கங்குவா நெகட்டிவ் விமர்சனத்தால் விஜயை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… வெளுக்கும் ரசிகர்கள்…
அதற்கு பதில் அளித்த சத்யராஜ் ‘ஏன் சாமி கும்பிடுகிறவன் வீட்டில் எவனும் சாகவில்லையா? சாமி கும்பிடுவதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. சாமி கும்பிடுகிறவன் வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போவதில்லையா? இல்லையாரும் சாகவில்லையா? யாருக்கும் ஸ்டோக் வந்ததில்லையா? குடும்பத்தோட கோயிலுக்கு போறவர்களின் வேன் கவிழ்வது இல்லையா? இதுபோல சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை’ என்று சற்று கோபமாக பேசி இருந்தார்.
Cinema News
சாமி கும்பிட்டவங்க வீட்ல எதுவும் நடக்கலயா!.. நான் சாமிய திட்றதால இப்படியா!.. கொந்தளித்த சத்யராஜ்!..
By
ramya suresh
நடிகர் சத்யராஜ் நான் சாமியை திட்டுவதால் தான் என் மனைவி கோமாவிற்கு சென்றுவிட்டார் என்று கூறியவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பிறகு வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிகச் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்பவர் நடிகர் சத்யராஜ். இவர் தற்போது வரை சினிமாவில் நடித்து அசத்தி வருகின்றார். ஹீரோவாக இல்லை என்றாலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார்.
இதையும் படிங்க: டைவர்ஸ் அவங்களுக்கு பரம்பரை வியாதி!.. விவாகரத்துக்கு முக்கிய காரணமே இதுதான்!.. பயில்வான் பளீர்!..
தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இவர் 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு சிபிராஜ் என்கின்ற மகனும், திவ்யா என்கின்ற மகளும் இருக்கிறார்கள்.
சிபிராஜ் தனது தந்தையை போலவே சினிமாவில் நடித்து வருகின்றார். ஆனால் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகின்றார். சத்யராஜின் மகள் சத்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் குறித்து கூறியிருந்தார். தனது தாய் மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதுடன் தனது தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருந்து தங்களை பார்த்துக் கொள்கின்றார் என்று கூறியிருந்தார்.
sathyaraj
இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் நடிகர் சத்யராஜை சிலர் விமர்சனமும் செய்து வந்தார்கள். நடிகர் சத்யராஜை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மேலும் பெரியாரை பின் தொடர்பவர் என்பதால் கடவுளை திட்டி பல மேடைகளில் பேசியிருக்கின்றார்.
இதனால் தான் அவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமை அவர் கோமாவிற்கு சென்று விட்டார் என்ற பல கமெண்ட்களை கூறி வந்தார்கள். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த சத்யராஜ் இது குறித்து பேசி இருந்தார். அந்த நிகழ்ச்சியை பேட்டி எடுத்த தொகுப்பாளர் உங்கள் மனைவிக்கு இப்படி ஆனதற்கு நீங்கள் கடவுளை திட்டியது தான் காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள் என்று கேட்டார்.
இதையும் படிங்க: கங்குவா நெகட்டிவ் விமர்சனத்தால் விஜயை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… வெளுக்கும் ரசிகர்கள்…
அதற்கு பதில் அளித்த சத்யராஜ் ‘ஏன் சாமி கும்பிடுகிறவன் வீட்டில் எவனும் சாகவில்லையா? சாமி கும்பிடுவதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. சாமி கும்பிடுகிறவன் வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போவதில்லையா? இல்லையாரும் சாகவில்லையா? யாருக்கும் ஸ்டோக் வந்ததில்லையா? குடும்பத்தோட கோயிலுக்கு போறவர்களின் வேன் கவிழ்வது இல்லையா? இதுபோல சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை’ என்று சற்று கோபமாக பேசி இருந்தார்.
More in Cinema News
Cinema News
இரவில் ஏன் திடீர் மயக்கம்… மகாமக சம்பவத்தை விட அதிக மரணங்கள் ஏன்? எழும் சந்தேகங்கள்!..
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Cinema News
Vijay TVK: முழுக்க முழுக்க நீங்கதாங்க பொறுப்பு! கரூர் சம்பவம் பற்றி ப்ளூசட்டை மாறன் பதிவு
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Cinema News
Tvk Stampede: விஜயை குறை சொல்வது சரியில்லை… இந்த சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க… எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Cinema News
Karur: எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி சத்யராஜ் காட்டம்! கள்ளச்சாராய சம்பவம்.. எங்க சார் போனீங்க?
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
Cinema News
TVK Vijay: கரூர் கோர சம்பவம்! உடனே விஜயை கைது பண்ணுங்க!.. பொங்கிய ஓவியா
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...