Categories: Cinema News latest news

சாப்பிடுறதுக்கே வழி இல்ல… வறுமையில் தவிக்கும் சீரியல் நடிகரின் மனைவி!

தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்பட, மற்றும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவரின் மனைவி தாரா கணவர் இறந்த பின்னர் சாப்பிடுவதற்கே வழியில்லமல் மிகவும் கஷடப்படுவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் தனது கணவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து எனக்கென எதுவுமே செய்யவில்லை. தன் அக்கா தங்கைக்கு மட்டும் வீடு கட்டிக்கொடுத்தார். கடைசியாக வீடு ஒன்றை காட்டினார். ஆனால், அதில் குடும்பம் போவதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டார்.

சாப்பிடுவதற்கு கூட வழியில்லாததால் அந்த வீட்டை நான் சத்யா சீரியல் தயாரிப்பாளருக்கு வாடகை விட்டுள்ளேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறேன் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்