அதிக நேரம் போன் யூஸ் பண்ணா இப்படித்தான் ஆபரேஷன் பண்ணனும்!.. எச்சரித்த ஷகீலா!..
நடிகை ஷகீலா கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணத்தயும் பொதுமக்களுக்கு விழிப்புனர்வும் ஏற்படுத்தும் வகையில் அவர் விளக்கமளித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையான ஷகீலா, சமீபத்தில் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது மற்றும் வீட்டில் கழுத்து காலர் அணிந்து ஓய்வெடுப்பது போன்ற காட்சிகளையும் அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தனது உடல்நிலை குறித்து பேசிய ஷகீலா, நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்தியதாலும், குறிப்பாக மொபைலில் அதிக நேரம் கேமிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாலும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தேவைக்கு அதிகமாக செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்றும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.