அப்பாவின் பெயருக்கு ஏற்ற கம்பீரமான அரசு மரியாதை தந்தீங்க... விஜய்க்கு நன்றி சொன்ன பாக்யராஜின் மகன் சாந்தனு!
பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் உடைந்து போய் இருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். தற்போது, கே.பாக்யராஜின் மகனும், பிரபல நடிகருமான சாந்தனு எக்ஸ் தளத்தில் "முதலமைச்சர் விஜய் அண்ணா, உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை.
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி அண்ணா" என்று பதிவிட்டுள்ளார்.
Honourable @CMOTamilnadu
— Shanthnu (@imKBRshanthnu) June 29, 2026
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை… pic.twitter.com/g3l824pm4T
