">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தூதுவிடும் காதலிகள்.. வேண்டாம்டா சாமி… ஓடி ஒளியும் சிம்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. ஸ்டைலான அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வாழ்வில் காதல், வருவதும் போவதுமாக இருக்கிறது. அவருக்கு திருமணம் செய்து வைத்து பேரன் அல்லது பேத்தியை பார்க்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள்.
இந்நிலையில் நடிகரின் முன்னாள் காதலிகளான ஹன்சிகா மற்றும் மாதுரி இருவர் அவருடன் மீண்டும் சேர முயற்சி செய்து வருகிறார்களாம். காதலை புதுப்பிக்கும் எண்ணத்தில் அவர்கள் சிம்புவிற்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
சிம்புவோ அந்த இரண்டு பேரையுமே கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவரின் கண்கள் எல்லாம் கெரியர் மீது மட்டுமே இருக்கிறதாம். கதை கேட்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம் சிம்பு.
இதற்கிடையே சிம்புவீட்டில் அவருக்கு பெண் பார்த்து வருகிறார்களாம். முன்னாள் காதலிகள் தூதுவிடும் போது கூட சிம்பு இப்படி ஒதுங்கிப் போவதை பார்த்து கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். தற்போது கோடம்பாக்கத்தில் சிம்பு பற்றி தான் பேச்சாக உள்ளது.