Categories: Cinema News latest news

சிம்புவின் நண்பருக்கு இவ்வளவு திறமையா?! உலக சினிமாவையே மிரள வைத்துவிட்டார்.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் எம்எஸ் தோனி என்கிற பெயரில் கடந்த 2016-ஆம் ஆண்டு தயாராகி வெளியானது. இந்த படத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அடுத்து இருந்தார்.

தற்போது, இதனை அடுத்து எம்எஸ் தோனி பெயரில் அவரின் உருவத்தை மட்டும் வைத்து ஓர் கிராபிக்ஸ் நாவல் தயாராகி வருகிறது.

அதற்கு, எம் எஸ் தோனி உருவம் மட்டும் கொடுத்துள்ளார். இந்த நாவலுக்கு அதர்வா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார்.

இவர், நம்ம சிலம்பரசனின் நெருங்கிய நண்பராம் சிம்பு சினிமாவில் வந்த பிறகு அவரது நண்பர்களும் அவரைத் தொடர்ந்து சினிமாவில் கால்பதிக்க தொடங்கினார். ஏற்கனவே, நடிகர் மகத் திரைத்துறையில் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்- என் அண்ணன் மட்டும் தான் என்ன வச்சி படம் எடுப்பான்.! தம்பி மேல் பாசம் அதிகம்.!

தற்போது புதிய இயக்குனராக ரமேஷ் தமிழ்மணி கால் பதித்துள்ளார். அதுவும் கிராபிக்ஸ் நாவலை கையில் எடுத்து எம்எஸ் தோனி அதில் முன்னணி கதாபாத்திரமாக வடிவமைத்து உலகப் புகழ் பெற்றுள்ளார். விரைவில், இந்த நாவல் கிராபிக்ஸ் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan