தூங்கி எழுந்தவுடன் சிம்ரன் குடிக்கும் பானம் - ஒல்லி பெல்லி ரகசியம் இதுதான்!
சிம்ரன்:
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகை சிம்ரன் 90ஸ் காலத்தில் இருந்து வந்தவர். நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார். தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

அதன் பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான சிம்ரன் பல வருடங்களுக்கு கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலமாக இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கினார்.
ஒல்லி பெல்லி அழகு:

தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்கள் சிறப்பு தோற்றங்களை ஏற்று நடிகை சிம்ரன் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய ஒல்லி பெல்லி அழகின் ரகசியத்தை நடிகை சிம்ரன் தெரிவித்து இருக்கிறார். அதாவது நான் தூங்கி எழுந்தவுடன் இஞ்சி டீ போட்டு குடிப்பேன். அதுதான் என்னுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் என் உடல் ஒல்லியாகவும் இருக்க காரணமாக இருக்கிறது என்றார்.
