Categories: Cinema News latest news

எங்க அம்மா இருக்கும் போதே அந்த நபர் என்னை கட்டிப்பிடித்தார்.! பகீர் கிளப்பிய சின்மயி.!

மீடூ எனும் ஹேஸ்டேக் மூலம் உலகம் முழுக்க பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் பற்றி கூற ஆரம்பித்தனர் . அதிஇ பெரும்பாலானோர் சினிமா துறையினை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்த மீடூ புகார் மூலம் தமிழகத்திலும் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அதில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது என்றால் அது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் தான்.

இதையும் படியுங்களேன்  – அமலா பாலுக்கு பாலியல் தொல்லை..? முன்னாள் காதலர் அதிரடி கைது.!

இது பற்றி அண்மையில் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிடுகையில், ‘ அப்போது நான் சின்ன பொண்ணு. எனக்கு அவர் எதற்காக கட்டிப்பிடிக்கிறார் என்றே தெரியாது. அவர் கட்டிப்பிடிக்கும் போது எனது அம்மா கிழே தான் இருந்தார்.

இதையும் படியுங்களேன்  – அஜித் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்… தரமான சம்பவம் ஆன் தி வே…

என்னை மாடிக்கு அழைத்தார்கள். எனது அம்மாவும், சரி பெரிய மனிதர் தானே பாராட்டுவதற்கு அழைக்கிறார் போலும் என அனுப்பிவிட்டார். ஆனால், அங்கு தான் இந்த சம்பவம் நடைபெற்றது. நான் உடனே அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். இதனை எனது அம்மாவிடம் கூறினேன். இதனை தவிர்த்துவிடு. அவர்களால் என்ன வேணும்னாலும் செய்ய முடியும். கொன்றுவிடுவார்கள் .என கூறினார்கள். ‘ என தனக்கு நடந்த அந்த சம்பவத்தை சின்மயி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Manikandan
Published by
Manikandan