யாரு அந்த மியூசிக் டைரக்டரு?.. பிரபல பாடகிக்கு பாலியல் துன்புறுத்தல்.. காமக் கொடூரன்!..

 
யாரு அந்த மியூசிக் டைரக்டரு?.. பிரபல பாடகிக்கு பாலியல் துன்புறுத்தல்.. காமக் கொடூரன்!..

பிக் பாஸ் பிரபலமான மாயாவின் உடன்பிறந்த சகோதிரியான பாடகி ஸ்வாகதா தான் இசைதுறையை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வாகதா தன் மூன்றாம் வயதிலிருந்து இசையை கற்றுக்கொண்டு சுமார் 15 ஆண்டுகளாக் முன்னணி பாடகியாக வலம் வந்தார். இவர் இஸ்பேட் ராஜா இதய ராணி, வஞ்சகர் உலகம், நோடா, காற்றின் மொழி உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மியூசிக் ப்ரொடியுசர் மற்றும் மியூசிக் இன்ஜினியர் ஆக சென்னையில் வேலைப் பார்த்திக்கொண்டிருந்த ஸ்வாகதா தற்போது அனைத்தையும் விட்டு விட்டு ரிஷிகேஷில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சிவசங்கரி டால்க்ஸ் என்ற யூடியுப் சேனலில் ஸ்வாகதா பாடகியில் இருந்து தொழிலதிபராக மாறிய காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரிஷிகேசில் இயற்கை வளங்களை கொண்டு காட்டன் துணிகளை கைகளாலே நெய்து விற்கும் தொழில் செய்யும் ஸ்வாகதா நான்கு பெண்களுடன் பிறந்தவர். ஒரு இசையமைப்பாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதிலிருந்து தப்பிபதற்காக தான் நான் ரிஷிகேஷ் வந்தேன் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பெயரை சொல்ல முடியாது அதுக்கென்று ஒரு நாள் வரும் போது நான் கூறுகிறேன். அவர் ஒரு பெரிய இசையமைப்பாளர் என்று பெயர் பெற்றிருந்தாலும், பியானோவை கூட சரியாக வாசிக்கத் தெரியாது. இப்படிப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது எப்படி என எனக்கு புரியவில்லை. அந்த இசையமைப்பாளர் என்னிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட பிறகு, அவர் தொட்ட இடத்தில் இருந்த தோலை நீக்கி, புதிதாக தோல் உருவாகும் சிகிச்சையை கூட மேற்கொண்டேன். எனது மொபைலில் கூட அவரது பெயர் தோன்றாத வகையில் அமைப்புகளை மாற்றி வைத்திருந்தேன்.

இப்போது அந்த பயமும், மன உளைச்சலும் அனைத்தையும் கடந்து வந்துவிட்டேன். இன்று நான் தைரியமாக நிற்கும் பெண்ணாக மாறியுள்ளேன். என்னுடன் மட்டுமல்லாமல், பல பெண்களிடமும் அவர் இதேபோன்று தவறாக நடந்துகொண்டுள்ளார். அந்த பாதிப்பிலிருந்து வெளியே வர சிலருக்கு நான் உதவியுள்ளேன். இந்த விஷயம் அவரது மனைவிக்கும் தெரியும்; அதனை அறிந்த பின்னரும் அவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் மோசமான நபர் அவர். சிறிய குழந்தைகள் பாட வரும்போது கூட, சிசிடிவி மூலம் அவர்களை கவனிக்கும் கொடூரமானவர்.

மேலும், உறுதியான ஆதாரங்களுடன் அந்த இசையமைப்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன். தற்போது அதற்கான தைரியம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த பேட்டிக்குப் பிறகு, அந்த இசையமைப்பாளர் யார் என்று பலரும் யூகித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

From Around the web