Siragadikka Aasai: மனோஜ் விஜயாவின் கேடி வேலையை மாட்டிவிட்ட சிந்தாமணி!... போச்சா?

 
Siragadikka Aasai: மனோஜ் விஜயாவின் கேடி வேலையை மாட்டிவிட்ட சிந்தாமணி!... போச்சா?

Siragadikka Aasai: முத்து கண்டுபிடித்த உண்மையால் அடுத்த சிக்கலில் சிக்க இருக்கும் விஜயா மற்றும் மனோஜ். இனி ஆட்டம் செம சூப்பரா இருக்கும் போலயே!

திடீரென வீட்டுக்குள் வரும் முத்து  மீனாவை கத்தியால் குத்தியவனை கண்டுபிடித்து போலீஸில் கொடுத்துவிட்டேன். அவன் சாட்சியத்தால் இப்போ சிந்தாமணியை அரெஸ்ட் செய்து விட்டனர் எனக் கூறிக்கொண்டு இருக்கிறார். விஜயா இருந்தும் அதை நம்பாமல் திமிராக பேசுகிறார். 

பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சிந்தாமணியை காப்பாற்ற அவர் கணவர் வக்கீலுடன் வருகிறார். அப்போ ரோகிணி வந்து இது எப்படி நடந்தது. நான் உங்களை காப்பாத்துறேன் எனக் கூற சிந்தாமணி தேவையில்லை. என் வீட்டுக்காரர் வந்துவிடுவார் என்கிறார். 

பின்னர் சிந்தாமணி பழி வாங்கும் நோக்கத்தில் விஜயா வீட்டுக்கு செல்ல முத்து என்ன ஓடி வந்துட்டீயா எனக் கேட்க நான் தப்பே செய்யலை. நான் ஏன் போகணும் ஜெயிலுக்கு? அதற்கான ஆள் வந்து சரண் அடைஞ்சிட்டான் என்கிறார். 

பின்னர் தேர்தலில் நான் தோத்துட்டதால என் மேல மரியாதையே இல்ல. காசு கொடுத்தவன்லாம் என்கிட்ட காசு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதான் இங்க வந்தேன் என்கிறார். குடும்பத்தினர் எல்லாம் புரியாமல் பார்க்க அப்போ பைனான்சியர் உள்ளே வருகிறார். 

இதில் விஜயா, மனோஜ் திரு திருவென முழிக்கின்றனர். அவரை பார்த்த அண்ணாமலை வாங்குன காசுக்கு வட்டி வருதுல அப்புறம் என்ன எனக் கேட்க பேங்க்ல இருந்த பத்திரத்த எடுத்துட்டு வந்து என்கிட்ட அடகு வச்சி 60 லட்சம் வரை கடன் வாங்கிருக்காங்க. 

நான் கையெழுத்து போடலையே எனக் கேட்க நீங்க சைன் போட்ட பத்திரத்தினை உங்க வைஃப் தான் எடுத்துட்டு வந்தாங்க என்கிறார். இதில் குடும்பமே என்ன செய்வது எனத் தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கின்றனர். இனிமேல் கதை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web