மீனா ப்ளானால் தப்பிய மனோஜ்!... ஆனா ரோகிணி திட்டத்தால் எல்லாம் போச்சே!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
மனோஜை ஃப்ராடு கேஸில் போலீஸ் அழைத்து சென்று இருக்கின்றனர். இது தெரிந்து அங்கு வரும் ரோகிணி ஃபைனான்சியரை பார்க்க செல்கிறார். அவரிடம் கெஞ்சி மனோஜுக்கு ஒன்னும் தெரியாது. இதுவெல்லாம் அவருடைய அம்மா வேலையாக இருக்கும் என்கிறார்.
சிந்தாமணியிடம் பைனான்சியர் பேச அவர் 10 லட்சம் கேட்க சொல்கிறார். ரோகிணியும் முடிந்த வரை ரெடி செய்து எடுத்து வருவதாக ஓடுகிறார். கிரிஷின் பெரியப்பா குடும்பத்தை பார்த்து தன் நிலையை சொல்லி கெஞ்ச அவர்கள் தற்போது 10 லட்சம் முடியாது.
5 லட்சம் ரெடி செய்து தருவதாக சொல்கின்றனர். மீனா சிந்தாமணியை தன் வழிக்கு எடுத்து வர திட்டமிட்டு அவர் ஏரியாவில் பெண்களுக்கு அவர் செய்த கொடுமைகளை புகாராக எழுதி வாங்குகிறார். அதை எடுத்துக்கொண்டு சிந்தாமணியை மிரட்டுகிறார்.
இந்த புகாரை நானும் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தால் உன் நிலைமை என்னவாகும் தெரியுமா? ஒழுங்கா அவரை வெளில விட்ரு என மிரட்டி விட்டு செல்கிறார். ரோகிணியும் அந்த நேரத்தில் அதை வாங்கிக்கொண்டு சிந்தாமணியை பார்க்க செல்கிறார்.
காசு இல்லையே என சிந்தாமணி நடிக்க அதெல்லாம் வேண்டாம். என்னிடம் 5 லட்சம் இருக்கு. அதை வாங்கிக்கிட்டு கேஸை வாபஸ் வாங்க சொல்லுங்க. நீங்க சொன்னா அவர் கேப்பாரு எனக் கெஞ்ச மீனாவின் மிரட்டலால் தான் படிந்ததாக இருக்க கூடாது.
ரோகிணிக்கு செஞ்சது போல இருக்கட்டும் என பைனான்சியரிடம் பேசி சொல்ல அவரும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன். அவர் பொண்டாட்டி காதலுக்காக இதை ஒப்புக்கொள்வதாக பேச முத்து, மீனா அதிருகின்றனர்.
மனோஜும் ரோகிணியிடம் பேச வருகிறார். இதையடுத்து விஜயா பேச்சை கேட்காமல் மறுபடியும் ரோகிணி பக்கமே மனோஜ் சாய வாய்ப்பு இருக்கலாம். உள்ளே வந்து விஜயாவுடன் ரோகிணி பஞ்சாயத்தை தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.
