Siragadikka Aasai: ரோகிணியை மாட்டிவிட ப்ளான் போடும் மனோஜ்!... என்ன நடக்க போகுதோ?

 
Siragadikka Aasai: ரோகிணியை மாட்டிவிட ப்ளான் போடும் மனோஜ்!... என்ன நடக்க போகுதோ?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த வார டிஆர்பி லிஸ்ட்டில் சிறகடிக்க ஆசை விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் லிஸ்ட்டிலும் மொத்த சீரியல் லிஸ்ட்டில் 6வது இடமும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் மீனா வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். 

ஆனால் சீதா தாலி செயின் திருட்டு போன விவாகரத்தினை கண்டுபிடிக்க முத்துவுடன் அவர் களமிறங்கி இருந்தார். அதில் தன்னை பற்றி சொன்ன ஜோசியர் ஒரு திருடி என்பதை தெரிந்து கொண்டார். அதையடுத்து அவரை ப்ளான் செய்து பிடித்து கொடுத்து விட்டனர்.

ஜோசியக்கார பெண்ணை அழைத்து வந்து விஜயாவிடமும் சொல்ல வைத்துவிட்டனர். இதனால் மீண்டும் மீனாவை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வரும் நிலைக்கு வந்துவிட்டார் விஜயா. இதனால் அவர் கடும் கோபத்தில் இருக்கிறார். 

மீனா வீட்டுக்கு வந்துவிட்டதால் விருந்து நடக்கிறது. அப்போது மீனா முத்து காப்பாற்றிய நகையை பெற்ற ஜோடி பரிசுடன் அவர்களை பார்க்க வந்து நகையை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதில் விஜயா வெறுப்பாகி அந்த மீனாவிடம் அசிங்கப்பட்டுவிட்டேன்.

இதற்கு காரணம் ரோகிணி தான் என திட்டிக்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து மனோஜ் அவளை மாட்டிவிட நான் ப்ளான் போடுகிறேன் என்கிறார். இதனையடுத்து ரோகிணிக்கு கால் செய்து பேச வேண்டும் எனக் கூற ரோகிணியும் சந்தோஷத்தில் கிளம்புகிறார். 

ஆனால் திடீரென மனோஜ் கால் செய்து வர சொல்லியதை சந்தேகப்படுகிறார். ப்ளான் செய்து மாட்ட வைக்க பாக்கிறானா எனவும் யோசித்து கொண்டு இருக்கிறார். இந்த முறையாது ரோகிணி சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

From Around the web