Categories: Cinema News latest news

கதையை கேட்டு தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்.! நல்ல வேளை அத மட்டும் செய்யல…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் “டான்” படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 22-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகையான சாய் பல்லவி நடிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து யோகி பாபாவை வைத்து மண்டேலா என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகயேன் நடிக்கவுள்ளார். படத்தின் கதையுடைய ஒரு வரியை மட்டும் கேட்டு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

இதையும் படியுங்களேன்- ப்ளீஸ் ‘அந்த’ மாதிரி நடிக்காதீங்க..ரசிகரின் கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் நச் பதில்..

இதனால், படத்திற்கான முழு கதை புத்தகத்தை எழுதி இயக்குனர் அஸ்வின் சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டாராம். கதையை படித்து பார்த்த அவர் மிகவும் ஷாக் ஆகிவிட்டாராம். ஏனென்றால், அதில் ஹீரோயின்கான காட்சிகள் மிகவும் குறைவாக இருக்கிறதாம். பொதுவாக சிவகார்த்திகேயன் படங்களில் ஹீரோயின்களுக்கு கண்டிப்பாக முக்கியதுவம் இருக்கும்.

இதனால், படத்தின் கதையை மாற்ற சொல்லி, ஹீரோயின் காட்சிகளை அதிகப்படுத்தி எழுதி கொண்டுவருமாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துவிட்டாராம். மேலும், கொடுத்த கால்ஷீட்டை 2 மாதம் தள்ளி போட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நல்ல வேலை படத்தின் ஸ்க்ரிப்ட்டை முழுதாக முடித்துவிட்டு வாருங்கள் அதற்குள் நான் ஒரு படம் செய்து விட்டு வருகிறேன் என கூறாமல், உடனே கால்ஷீட் தருகிறேன் என என்று கூறினாரெ என்று சினிமா வட்டாரத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Manikandan
Published by
Manikandan