Connect with us
sunaina

Cinema News

சுனைனா மீது அவ்ளோ ஆசை!.. காண்டம் வாங்கிட்டு வர சொன்னாரு நகுல்!.. இயக்குனர் பகீர் பேட்டி!…

வாஸ்கோடகாமா படத்தின் அசோசியேட் டைரக்டர் ஏ.எம்.சந்துரு. இவர் நகுல் பற்றி பகீர் கிளப்பும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் டைரக்டரா ரெண்டு வருஷமா ஒர்க் பண்ணினேன். கடைசி 10 நாள் நகுல் இந்தப் படத்தோட சூட்டிங்ஸ்பாட்டுக்கு என்னை வரவிடல. ஒர்க் பண்ண விடல. டிரைலர்ல என் பேர் போடல. ஆடியோ லாஞ்ச்சுக்கும் ட்ரை பண்ணினேன்.

என்னைக் கூப்பிடல. படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படத்துலயும் அசோசியேட் டைரக்டரா என் பேரை போடல. நகுல் ஒரு நாள் சூட்டிங்ஸ்பாட்ல என்னைக் காண்டம் வாங்கி வரச் சொன்னாரு.

AM.Chandru

AM.Chandru

‘இல்ல சார் எனக்கு நிறைய வேலை இருக்கு’ன்னு சொன்னேன். ‘ரொம்ப அர்ஜென்ட்.. வாங்கிட்டு வாங்க’ன்னு சொன்னாரு. ‘இல்ல எனக்கு வேலை இருக்கு’ன்னு சொல்லிட்டு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்தப் பிரச்சனையை பெரிசுபடுத்த வேண்டாம்.

சுமூகமா முடிஞ்சிடும்னு நினைச்சேன். இது நடந்து 10 நாள் கழிச்சி நகுலுக்கிட்ட ‘நான் கதை சொல்ல வரவா’ன்னு கேட்டேன். வரச் சொன்னார். நான் பார்வையற்றவர்களுக்காக உலகை வெல்லலாம்னு ஒரு படம் பண்றேன். அதுல நீங்க 10 நாள் நடிச்சிக் கொடுக்கணும்னு அவருக்கிட்ட கதை சொல்றேன். ‘அவ்வளவு நாள் எல்லாம் சம்பளம் இல்லாம நடிக்க முடியாது. ஒரு நாள் மட்டும்னா கால்ஷீட் தர்ரேன்’னாரு.

எங்கிட்ட இப்படி சொல்லிட்டு வாஸ்கோடகாமா டைரக்டர்கிட்ட ‘சந்துரு ஓயாம தொல்லை பண்ணிக்கிட்டு இருக்காருன்னு சொன்னாரு. அவரு சூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்தாருன்னா நான் இனிமே வர மாட்டேன்’னும் சொல்லிட்டாரு. அதுல என்ன பெரிய விஷயம்னா நகுலுக்கு அந்தப் படத்தோட ஹீரோயினா நடிச்ச பிரிகடா செட்டாகல.

vascodagama

vascodagama

அவங்க கூட அவரோட அப்பாவும் சூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்தாரு. அது நகுலுக்குப் பிடிக்கல. ‘இவங்க அட்ஜஸ்ட்மண்ட் பண்ண மாட்டாங்க. சுனைனாவ ஹீரோயினா போடுங்க. அவங்க தான் செட்டாவாங்க’ன்னு டைரக்டர்கிட்ட சொன்னாரு. கடைசியா ஒரு வாய்ப்பு கொடுப்போம்னு பிகிலாவுக்குக் கொடுத்தாங்க. அப்பவும் அவங்க அப்பாவோட தான் வந்தாங்க.

டைரக்டரும் அட்ஜெஸ்ட்மெண்ட் பத்தி அவங்கக்கிட்ட பேச முடியல. அப்புறம் அவங்களைத் தூக்கிட்டாங்க. அவருக்கு சுனைனாவை ஹீரோயினாக்க பிடிக்கல. அதனால நகுல் ஆடியோ லாஞ்சுக்கும் வரல. சொன்னாங்க. நகுலுக்கு சுனைனா மேல ஆசை. அவங்க கூட ‘காதலில் விழுந்தேன்’ படத்துல ஒர்க் பண்ணிருக்காங்க.

இந்தப் பிரச்சனைக்கு நான் தான் ஆதாரம். ஏன்னா நான் 2 வருஷமா வேலை பண்ணிருக்கேன். சம்பளம் இல்லை. அப்படின்னா எங்கே வேணாலும் இதைப் பத்திப் பேசுவேன் என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் அசோசியேட் டைரக்டர் ஏஎம்.சந்துரு.

இயக்குனர் கொடுத்த வீடியோவின் லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top