
Cinema News
இரவில் ஏன் திடீர் மயக்கம்… மகாமக சம்பவத்தை விட அதிக மரணங்கள் ஏன்? எழும் சந்தேகங்கள்!..
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர் இன்னும் கவலைக்கு இடமாக மருத்துவமனையில் உள்ளனர். ஆனால் இந்த சம்பவம் இன்னும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழகத்தில் இதற்கு முன்னர் நிறைய கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து அதில் நிறைய மரணங்கள் நடந்து இருக்கிறது. 1992ம் ஆண்டு ஜெயலலிதா கலந்துக்கொண்ட மகாமக சம்பவத்தில் 5 லட்சம் பேர் கலந்துக்கொண்ட நிலையில் 50 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.
2016ம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியில் நடந்த கூட்ட நெரிசலில் 15 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் 2 பேர் மட்டுமே உயிரிழந்தனர். சென்னையில் நடந்த ஏர்ஷோவில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
அதிக வெயிலினால் நீர்சத்து குறைப்பாடு ஏற்பட்டு 95க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 90 பேர் காப்பாற்றப்பட்டு 5 பேர் மட்டுமே உயிரிழந்தனர். அப்படி பார்க்கும் போது வெறும் 27000 பேர் கலந்துக்கொண்ட கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமல்லாமல் சந்தேகத்தை எழுப்பு இருக்கிறது.

மற்ற கூட்டங்களுடன் ஒப்புடும் போது இந்த எண்ணிக்கை ரொம்ப குறைவு. இதனால் மருத்துவம் சரியாக கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி ஒரு புறம் எழுந்துள்ளது. கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு மரணங்கள் இங்கு அதிகமாக நடக்கவே இல்லை.
விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போதே நிறைய பேர் மயங்கி விழுந்தனர். அதுவும் சரியாக விஜய் பேசும் போது அது நடந்தது. காலை கூட இல்லை வெயில் இல்லாத இரவில். தண்ணீர் பாட்டில்கள் நிறைய தரையில் இருந்ததால் இந்த இறப்பு அதனால் இருக்க வாய்ப்பு இல்லை.
மேலும், நீர்ச்சத்து குறைவால் மயங்கியவர்கள் முதல் உதவி கொடுத்த உடனே மீண்டுவிடுவார்கள். இதற்கு முன் விஜயின் கூட்டங்களில் கூடிய அதே கூட்டமே இங்கே கூடி இருக்கிறது. விஜய் பாசிசத்துக்கு எதிராக பேசுவதால் விஷ வாயு எதுவும் திறந்துவிடப்பட்டதா?
வன்முறையாளர்கள் எல்லாரும் கூட்டத்தில் இருந்தார்களா? விஜயை அரசியலை விட்டு நீக்க நடக்கும் சதியா என பல கேள்விகள் எழுந்துள்ளது. ஆம்புலன்ஸை தடுத்தவர்களை ஏன் கைது செய்யவில்லை. அதை இந்த சம்பவத்துக்கு பயன்படுத்திக்க கொள்வதற்கா?

மொத்த சமூக வலைத்தளமும் விஜய் என்ற ஒற்றை மனிதர் மீது பழியை சுமத்துவதை பார்க்கும் போது அவர் மீதான பழி வெறி போன்றே தெரிகிறது. இயல்பான கூட்ட நெரிசல் என்றால் ஏன் விஜயின் முந்தைய கூட்டங்களில் இது போல நடக்கவில்லை.
நெரிசலில் நெருங்கிய உடல்களை எங்கும் பார்க்க முடியவில்லை. அத்தனை பேருக்கும் மயக்கம் வருமா? விஜய் லேட்டா வந்ததால் தான் இந்த பிரச்னை எனப் பேசிக்கொண்டு இருப்பது முறையல்ல. எல்லா கூட்டங்களில் இத்தகைய தாமதம் நடந்துள்ளது. இந்த பிரச்னையில் ஒரு சதி இருக்க வாய்ப்பு உள்ளது.