">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆஸ்காரில் இருந்து வெளியேற்றப்பட்ட சூரரைப் போற்று… கவலையில் கோலிவுட்
பெரிதாக ஆஸ்கார் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த சூரரைப் போற்று படம் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்த படம் சூரரைப் போற்று. சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்ணா முரளி இணைந்து நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. நிஜ வாழ்க்கையை கொண்டு எடுத்த படம் என்றாலும் தமிழ் சினிமாவிற்கென சில விஷயங்களை புகுத்தி கொடுத்ததால் படம் செம ஹிட் அடித்தது. தொடர்ந்து, ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றது.
அதுவே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை கிளப்பியது. இந்நிலையில், இப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வான 366 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சிறந்த படம் என்ற பிரிவில் மட்டுமல்லாது, சூர்யா சிறந்த நடிகருக்கான பட்டியலிலும், அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். மார்ச் 5 முதல் 10ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, 15-ல் இறுதி பட்டியல் வெளியாகி இருக்கிறது. இப்பட்டியலை பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து வெளியிட்டார். இறுதி பட்டியலில் சூரரைப் போற்று இடம் பெறவில்லை. கண்டிப்பாக ஆஸ்கார் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், இது படக்குழுவிற்கு மட்டுமல்லாது கோலிவுட் ரசிகர்களுக்கும் பெரிய கவலையாகி இருக்கிறது.