முதலமைச்சர் அம்மாவே இந்த பிக் பாஸ் பிரபலத்தோட வீட்டுக்கு போயிருக்காங்களே!.. என்ன விசேஷம்!..
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி, தனது வீட்டில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை விசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சுஜா வருணி, தொடர்ந்து நடைபெறும் கொண்டாட்டங்கள், அழகான தருணங்கள் மற்றும் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பாசிட்டிவ் வைபையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து கொண்டாடி, அன்பும் வாழ்த்துகளும் பெற்றது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட அனிதா அக்காவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சுஜா, அவர் வெளிப்புற அழகை மட்டுமின்றி மனதளவிலும் மிகவும் அழகானவர் என்றும், அன்பான விருந்தோம்பலுடன் அனைவரையும் வரவேற்று இந்தக் கொண்டாட்டத்தை சிறப்பானதாக மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது ஆசீர்வாதம் தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் சுஜா கூறியுள்ளார்.

அதேபோல், ஷோபா சந்திரசேகர் தங்களுக்கு அளித்த எதிர்பாராத அன்பான சந்திப்பு குறித்தும் சுஜா வருணி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது தங்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கத்தை ஷோபா சந்திரசேகர் இன்னும் நினைவில் வைத்திருப்பதாகவும், இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் தனது மகனுக்கு தொடர்ந்து அன்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி வருவதாகவும் சுஜா குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தாயாக இதுபோன்ற சிறிய தருணங்கள் தனக்கு மிகவும் விலைமதிப்பற்றவை என்றும், சில நினைவுகள் புகைப்படங்களில் மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் இதயத்தில் நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.