">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா… அப்ப வாடிவாசல் என்னாச்சு?…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா… அப்ப வாடிவாசல் என்னாச்சு?…
பரியேறும் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாய் ஒலிக்கும் அவரின் திரைப்படங்களின் அடுத்த வரிசையாக தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் சிறப்பாக வந்திருப்பதாகவும், தனுஷின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்து தாணு தயாரிக்க, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை தாணு தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.