Connect with us

latest news

காசு வேணா கொடுக்குறோம்!.. மறுபடி எடுங்க!.. சூர்யா படத்துக்கு வந்த சோதனை!…

Surya: இன்றைய முரட்டு சிங்கிள்களுக்கெல்லாம் மூத்த முன்னோடி என்றால் அது மௌனம் பேசியதே கௌதம் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை மென்மையாகக் காதலை ஒருபுறம் சொல்லியிருந்தாலும் மறுபுறம் காதலின் மறுபக்கத்தை வைத்து பகடியும் செய்திருப்பார் இயக்குநர் அமீர்..

இயக்குநர் பாலாவிடம் இரண்டு படங்களில் பணியாற்றிவிட்டு தனது முதல் படமாக மௌனம் பேசியதே-வை எடுத்தார் அமீர். அதேபோல், நந்தா படம் மூலம் தனது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அபரஜீதா தயாரிப்பு நிறுவனத்தோடு இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக சூர்யா கைகோர்த்தார்.

இதையும் படிங்க: கோட்டை விட்ட தனுஷ்…தட்டி தூக்கிய நித்யா மேனன்… 2 தேசிய திரைப்பட விருதை வென்ற திருச்சிற்றம்பலம்..

இந்தப் படம்தான் நாயகியாக லீட் ரோலில் திரிஷா நடித்த முதல் படம். இவர்களோடு புதுமுகங்களான நந்தா, நேஹா பெண்ட்சேவும் நடித்திருப்பார்கள். கேமியோவாக கிளைமாக்ஸில் சிறிதுநேரமே வந்து போனாலும் லைலாவின் கதாபாத்திரம் கவனிக்கப்படுவதாக அமைந்திருந்தது.

படத்தின் முக்கியமான படம் யுவனின் இசை. இந்தப் படத்துக்காக அவர் மெட்டமைத்த 8 பாடல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் சிறப்பாக அமைந்தது. அதுவும் குறிப்பாக முரட்டு சிங்கிள்களின் ஆதர்ஸ ஹீரோவான கௌதம் காதலில் விழுவது போன்ற சூழலில் வரும் அன்பே என் அன்பே பாடம் இன்றைக்கும் பலரின் லவ் ஆந்தமாக இருக்கிறது.

இந்தப் பாடல் ஷூட்டின்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடந்திருக்கிறது. `என் அன்பே என் அன்பே’ பாடலை மைசூர், பாண்டிச்சேரி என பல பகுதிகளின் ஷூட் செய்திருக்கிறார் அமீர். அந்தக் காட்சிகளின் ரஃப் எடிட் பகுதிகளைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் தரப்பு அதிருப்தியடைந்ததாம். இதையடுத்து இயக்குநர் அமீரை அழைத்து, `15 லட்ச ரூபாய் கொடுக்கிறோம்.

இதையும் படிங்க: என்ன பண்றது.. கஷ்டமாத்தான் இருக்கு!.. விஜய் ஆண்டனியை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!..

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top