">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சுசித்ரா – அர்ச்சனா மூஞ்சி என் இப்படி போகுது?
வைல்ட் கார்ட் போட்டியாளராக சுசித்ரா பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி
ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக கலக்கியவர் சுசித்ரா. இதையடுத்து இவர் காபி வித் சுச்சி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் திரைப்பட பாடகியாகவும் இவர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். போக்கிரி, மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவரது பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே 2017-ல் பரபரப்பாக பேசப்பட்ட சுச்சி லீக்ஸ் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக பாடகி சுசித்ரா பங்கேற்றுள்ளார். இந்த ப்ரோமோவில் சுசித்ராவை பார்த்ததும் பலருக்கும் ஓவியாவை பார்ப்பது போல் உள்ளதாக கூறியுள்ளார். சுசித்ரா வீட்டில் வந்ததும் எல்லோரும் அதிர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அர்ச்சனா மட்டும் அதிர்ச்சியில் ஷாக் ரியாக்ஷன் கொடுத்தார்.
பாடகி சுசித்ரா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த சில வாரங்களாக நட்சத்திர ஓட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அப்போது நள்ளிரவு 11 மணியளவில் ” என்னை கொலை செய்ய வராங்க… கதவை துரங்க என கத்திக்கொண்டே ஓடி வந்ததாகவும் . பின்னர் அவரை ஓட்டல் ரிசப்ஷன் ஏரியாவில் சற்று நேரம் அமரவைத்து சமாதானம் செய்ததாகவும் அண்மையில் தகவல் வெளியாகியது.
அதையடுத்து சில மணி நேரம் அவர் பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தாராம். பின்னர் விஜய் டிவி தரப்பில் பேசி அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு மீண்டும் அறைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்ப்போது அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருப்பது பலரையும் வியப்பூட்டியுள்ளது.