">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சொன்னது கேன்சல்… மீண்டும் அரசியல்… அப்ப சொன்னது பொய்யா கோபால்?…
சொன்னது கேன்சல்… மீண்டும் அரசியல்… அப்ப சொன்னது பொய்யா கோபால்?…
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் ரஜினி அரசியலுக்கு வருவார் என தொடர்ந்து கூறி வந்தார். இது தொடர்பாக பல முறை ரஜினியை நேரில் சந்தித்து பேசி வந்தார். ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி, தான் துவங்கவுள்ள கட்சிக்கு தமிருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.
டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிக்கவிருந்தார். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வர முடியாது என ரஜினி அறிவித்தார். இதில் அதிர்ச்சியடைந்த தமிழருவி மணியன் இனிமேல் அரசியில் ஈடுபட போவதில்லை என அறிவித்தார்.ஆனால், அவரின் நிலைப்படு 10 நாட்களில் மாறிவிட்டது.
காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். அப்போது, அவர் அரசியலில் ஈடுப்படவேண்டும் எனவும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக நீடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, தமிழருவி மணியன் அரசியலில் தொடர்வது உறுதியாகியுள்ளது. 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணி படு தோல்வி அடைந்த பின் ‘இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்’ என தமிழருவி மணியன் அறிவித்தார். அதன்பின் கடந்த 4 வருடங்களாக அவர் ரஜினியை நம்பி அரசியல் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.