Connect with us

latest news

Siragadikka Aasai: அருணின் தில்லாலங்கடியை மாட்டி விட்ட ஸ்ருதி… சீதா – மீனா திருந்துவாரா?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

மனோஜை சமாதானப்படுத்தும் ரோகிணி எனக்கு ஒரு சாமியார் தெரியும் தானே. அவரை வச்சு நான்தான் நல்ல மருமகள் என சொல்ல வைக்கலாம் என ஐடியா கொடுக்கிறார். முதலில் யோசிக்கும் மனோஜ் பின்னர் சரியென சொல்லி விடுகிறார்.

வீட்டில் ஸ்ருதி மற்றும் ரவி இருக்க ரெஸ்டாரெண்டுக்கு ஒரு பெயர் வைக்க யோசிச்சிட்டு இருக்கேன். ஆனா நீ எதுவுமே சொல்ல மாட்டிங்குற என்கிறார். ரவி பிறக்காத குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி நீ திறக்காத ரெஸ்டாரெண்டுக்கு பெயர் யோசிக்கிற என்கிறார்.

அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே ரவி ஹேப்பி எனக் கூற இப்போ என்ன சொன்ன என்கிறார் ஸ்ருதி. ரவி ஹேப்பி எனக் கூற அதான் ரெஸ்டாரெண்ட் பெயர் நல்லா இருக்குல. இரு வேற யாரும் ரிஜிஸ்டர் செஞ்சு வச்சி இருக்காங்களானு பார்ப்போம் என்கிறார்.

மறுபக்கம் முத்து குடிச்சிட்டு வர மீனா என்ன ஆச்சு எனக் கேட்கிறார். அந்த திருடனை பிடிச்சு கொடுத்தது நான் தான். ஆனா அந்த கான்ஸ்டபிள் அருண் நானே பிடிச்சு கொடுத்த மாதிரி பேட்டி கொடுக்கிறான் என முத்து புலம்பிவிட்டு படுக்க சென்று விடுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியாகும் மீனா பின்னர் சீதாவுக்கு கால் செய்து அருண் சொன்னதும், மாமா சொன்னதும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. அவர் உதவி செஞ்ச மாதிரி தானே சொன்னாரு. ஆனா இவரு நான் தான் பிடிச்சேனு சொல்லுறாரு. உங்க மாமா இப்படி சொல்ற ஆளே கிடையாதே என்கிறார்.

சீதா இவங்க என்னக்கா நம்ம சேர்க்கணும் நினைக்கிறேன். ஆனா இவங்க தள்ளிட்டே இருக்காங்க என்கிறார். காலையில் முத்துவை அந்த காப்பாற்றப்பட்ட பெண் அவர் கணவருடன் வர உங்க பிள்ளையை மரியாதை செய்ய வந்தோம் என்கிறார்.

விஜயா மனோஜ் என நினைத்து அவரை கூப்பிட ஆனால் அவர் இல்லை என்கிறார். பின்னர் ரவியை கூப்பிட அவரும் இல்லை என்கின்றனர். பின்னர் கார் டிரைவர் எனக் கூற அண்ணாமலை முத்துவை அழைக்க சொல்ல அவர் வருகிறார்.

காப்பாற்றப்பட்ட பெண்ணும், அவர் கணவரும் முத்து ரொம்ப பெருமையாக பாராட்டுகிறார்கள். விஜயா வயிற்றை தொட்டு கும்பிட அவரும் அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் டிரஸ் நகையை வைத்து கொடுக்க அந்த வீடியோவை ஸ்ருதி ரெக்கார்ட் செய்து வைரலாக்கி விடுகிறார்.

எல்லாருக்கும் அந்த வீடியோ பரவ அருணும் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர், இன்ஸ்பெக்டர் கால் செய்து என்னமோ நீ பிடிச்ச மாதிரி சொன்ன அந்த வீடியோவை பார்த்தியா எனக் கேட்கிறார்.

நான் பார்க்கலையே எனக் கூறுகிறார்.

ஊரே பார்த்துச்சு அந்த வீடியோவை நீ பார்த்தியா இல்லையானு எனக்கு தேவை இல்லை. அருண் அவன் உதவி செய்யலை சார். அருகில் தான் இருந்தான் என சமாளிக்க பார்க்க அதெல்லாம் தேவையில்ல. பொதுமக்கள் உதவி செஞ்சா முத நம்ம தான் பாராட்டணும் எனக் கூறுகிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top