">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆபாச படங்களை எடுத்த நடிகையின் கணவர்… கைது செய்த போலீஸ்…
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரது கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் ஆபாச படங்களை உருவாக்கி செல்போன் ஆப் மூலம் வினியோகம் செய்துவந்துள்ளதாக கூறி மும்பை போலிசார் அவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதமே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்ததாகவும், ராஜ் குந்த்ராவே குற்றவாளி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டியின் கணவர் சர்ச்சையில் சிக்குவது இது முதன் முறையல்ல. கடந்த காலங்களில் பணமோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.