">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனாவால் போன வேலை… 6 மாதமாக மன உளைச்சல்- தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் சோக முடிவு!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த தாஸ் என்பவர் வேலையிண்மையால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த தாஸ் என்பவர் வேலையிண்மையால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் தாஸ் தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக அவரது 6 மாதங்களுக்கு முன்னர் அவர் வேலை பறிபோயுள்ளது.
வேறு வேலைக்கு முயன்றும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் அவர் வீட்டு வாடகை, செலவு மற்றும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு கூட பணம் இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள தன் அறையில் அவர் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.