">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மருந்து வாங்க வந்த சிறுமிகள்… ஊசி முனையில் பாலியல் தொல்லை – கொடூர மெடிக்கல்காரர்!
மதுரையில் மருந்து வாங்க இரு சிறுமிகளை ஊசி முனையில் சங்கர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை செல்லூர் போஸ் தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவரது கடைக்கு 10 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள் மருந்து வாங்க வந்துள்ளனர். அவர்களுக்கு மருந்து கொடுத்து அனுப்பாமல் மற்றவர்களை முதலில் அனுப்பியுள்ளார் சங்கர்.
பின்னர் எல்லோரும் சென்றுவிட்ட பின்னர் சிறுமிகள் இருவரையும் கடைக்கு உள்ளே அழைத்து சங்கர், தன் ஆடைகளை அவிழ்த்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதைப்பார்த்த அந்த சிறுமிகள் பயத்தில் கத்த போக ஊசியை வைத்து அவர்களை மிரட்டியுள்ளார். மேலும் நடந்ததை வெளியில் கூற கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த பயத்திலேயே வீட்டுக்கு சென்ற சிறுமிகள் அசாதாரணமாக இருப்பதைப் பார்த்த அவர்களின் பெற்றோர் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டு போலீஸில் புகார் கொடுக்க சங்கர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.