
Cinema News
இந்த படத்தை நான் தயாரிக்க முடியாது!.. ரஜினி பட இயக்குனருக்கு நோ சொன்ன தயாரிப்பாளர்..
Published on
By
சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்களது முதல் படம்தான் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. ஏனெனில் முதல் படம் தரும் வெற்றியை வைத்துதான் ஒரு இயக்குனர் பிரபலமாகிறார். பெரிதாக வெற்றியை தராத படத்தை இயக்கும் இயக்குனர்கள் யாரும் அடுத்த படத்திற்கான வாய்ப்புகளை பெற முடிவதில்லை.
எனவே ஏதாவது ஒரு வகையில் பேசப்படும் திரைப்படமாக எடுக்கும் இயக்குனர்களே பிரபலமாகின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக கூட இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அவர் ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதையைதான் முதலில் படமாக்க நினைத்தார். அதற்காக ஒரு வருடமாக பல தயாரிப்பு நிறுவனங்களிடம் ஏறி இறங்கினார். ஆனால் எங்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
உதவி செய்த தயாரிப்பாளர்:
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சி.வி குமாரின் தொடர்பை கார்த்திக் சுப்புராஜ் பெற்றார். எனவே சி.வி குமாரை நேரில் சந்தித்து தனது படத்தின் கதையை அவரிடம் கொடுத்தார். அதனை படித்த சி.வி.குமார் இந்த திரைப்படம் எப்படியும் நான்கு கோடி பட்ஜெட்க்கு கொண்டு செல்லக்கூடிய கதை.
இதை நீங்கள் உங்களது முதல் படமாக எடுக்க வேண்டாம், முதல் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுங்கள் அப்படி ஒரு வேலை இந்த கதையைதான் நீங்கள் முதல் படமாக எடுக்க போகிறீர்கள் என்றால் இந்த படத்தை என்னால் தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
அதன் பிறகு சென்ற கார்த்திக் சுப்புராஜ் பீட்சா திரைப்படத்தின் கதையை எழுதினார். அதை கொண்டு வந்து சி.வி குமாரிடம் அவர் கொடுத்தார் அதனை படித்த சி.வி குமார் இந்த படத்தை எடுக்க ஒரு கோடி தான் செலவாகும். எனவே இதை நான் கண்டிப்பாக தயாரிக்கிறேன் என்று கூறினார். இப்படித்தான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் கார்த்திக் சுப்புராஜ். இந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...