குருவி உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்த கதை போல - பாரதிராஜாவின் தம்பி வருத்தம்!
இயக்குனர் பாரதிராஜா நுரையீரல் தொற்று மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
இந்த நிலையில் பாரதிராஜாவின் தம்பி பாரதிராஜாவின் மரணம் குறித்தும் அவரது மனைவி அவரை விட்டு சென்றுவிட்டார் என்று வெளியான பரபரப்பான செய்திகளை குறித்தும் தற்போது தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார் .

அந்த பேட்டியில் பாரதிராஜாவின் தம்பி கூறியிருப்பதாவது, கடைசி வரை அண்ணன் உடல் நலத்தோடு தான் இருந்தார். ஆனால் குருவி உட்கார பனப்பழம் விழுந்த கதை போல அண்ணி ஊருக்கு சென்ற நேரத்தில் இந்த துக்க நிகழ்வு எதிர்பாராமல் நடந்து விட்டது.
இறுதி நேரத்தில் அருகில் யாரும் இருக்க முடியாமல் போனது எங்களுக்கும் எங்கள் அண்ணிக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டதே தவிர யாரும் அவரை தனியாக விட்டு செல்லவில்லை. என்று இயக்குனர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.
