
Cinema News
இயக்குனருக்கு நடந்த சோகங்களைதான் படமாக்கியிருக்கோம்! – ஓப்பன் டாக் கொடுத்த அருள்நிதி…
Published on
By
தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சத்தில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் முக்கியமானவர் நடிகர் அருள்நிதி. அருள்நிதி நடிக்கும் திரைப்படம் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை பார்க்க முடியும்.
முக்கியமாக அதிகமாக ஹாரர் மற்றும் க்ரைம் த்ரில்லர் படங்களாக தேர்ந்தெடுப்பவர் அருள்நிதி. டிமாண்டி காலணி படத்தில் துவங்கி பல ஹாரர், க்ரைம் த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த டைரி திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் திருவின் குரல். இந்த படத்தில் இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பாரதி ராஜா நடித்துள்ளார். மீசையை முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஆத்மிகா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் ஹரிஸ் பாபு இந்த படத்தை இயக்குகிறார்.
நிஜக்கதையை அடிப்படையாக கொண்டது:
இந்த படம் குறித்து ஒரு பேட்டியில் அருள்நிதி கூறும்போது “இயக்குனர் அவர் வாழ்வில் சந்தித்த நிஜமான விஷயங்களை அடிப்படையாக கொண்டே இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
படத்தின் கதைப்படி காது கேட்காத கதாநாயகன் அவருடைய தந்தையை ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார். இந்த நிலையில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், காது கேட்காதபோதும் அவை அனைத்தையும் ஹீரோ எப்படி சரி செய்கிறார் என்பதே படத்தின் கதையாக உள்ளது.
வருகிற ஏப்ரல் 14 அன்று இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இதையும் படிங்க: இந்த நடிகர் சொந்தமா வீடு வாங்கக்கூடாது- தடை போட்ட கலெக்டர்… அப்படி என்ன நடந்திருக்கும்!
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....