
Cinema News
கவுண்டமணியை புகழ்ந்த பயில்வான் ரங்கநாதன்..வடிவேலு என்ன செய்தார் தெரியுமா?….
Published on
By
திரையுலகை பொறுத்தவரை போட்டி, பொறாமைகள் எப்போதும் அதிகம். தனக்கு பிடிக்காதவர்கள் ஜெயித்துவிடக்கூடாது என கருதும் பலரும் அந்த துறையில் இருப்பார்கள். அல்லது பலரையும் அந்த துறை அப்படி மாற்றிவிடும்.
மேலும், இவன் வளர்ந்துவிட்டால் நம்மை மதிக்கமாட்டான் எனக்கருதி பலரின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க போராடுவார்கள். ஆனால், அதையும் மீறித்தான் இங்கே நடிகர்கள் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து ஒரு இடத்திற்கு செல்கின்றனர்.போராடித்தான் தங்களுக்கான இடங்களை கலைஞர்கள் பெறுகின்றனர். அதேபோல், ஒருவருக்கு பிடிக்காத ஒருவரை, ஒருவர் பாராட்டினாலோ, புகழந்து பேசினாலோ அவரையும் ஒதுக்கி விடுவார்கள்.
இது போன்ற சம்பவம் தனக்கும் நடந்துள்ளதாக நடிகரும், யுடியூப் பிரபலமும் ஆன பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். காமெடியில் உச்சம் தொட்டவர் கவுண்டமணி என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். அவருக்கு பின் வந்தவர்களில் வடிவேலு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தான் நடிக்கும் திரைப்படங்களில் தேவைப்பட்டால் பயில்வான் ரங்கநாதனை அழைத்து வாய்ப்பு கொடுப்பது வடிவேலுவின் வழக்கம். ஒரு பேட்டியில் பயில்வான் ‘காமெடி கிங் என்றால் அது கவுண்டமணி மட்டுமே. இப்போதும் அவரின் காமெடி காட்சிகளை தொலைக்காட்சியில் ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள்’ எனக்கூற, இது வடிவேலுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். அதன்பின், தான் நடிக்கும் படங்களில் பயில்வான் ரங்கநாதனுக்கு வாய்ப்பு கொடுப்பதையே நிறுத்திவிட்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதனே தெரிவித்துள்ளார்.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...