">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாசத்துல உம்மா குடுக்கும் போது ஏடா கூடமாகிடப்போகுது – ஆளுயர நாயுடன் வரலக்ஷ்மி!
நாயை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்
�
தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான். இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது.
இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாத நிலையில் வரலக்ஷ்மி லைஃப் ஆஃப் பை என பெயரிடப்பட்ட ஒரு புதிய பேக்கரி கம்பெனியை துவங்கி தொழில் செய்து வருகிறார். அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவி செய்து மக்களின் பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில் தற்போது லாக்டவுனில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் வரலக்ஷ்மி தனது செல்லப்பிராணி நாயுடன் கொஞ்சி விளையாடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு பதற வைத்துள்ளார. டெரரா இருக்கும் அந்த நாயுடன் எப்படித்தான் உங்களுக்கு ரொமான்ஸ் பண்ண தோணுதோ… எங்களுக்கு பார்த்தாலே பயமா இருக்கு. பாசமா இருந்தாலும் கொஞ்சம் பார்த்து இரும்மா வரலக்ஷ்மி எக்கு தப்பா ஏதாச்சும் ஆகிடப்போகுது …