
Cinema News
தளபதி 68 சிம்புவுக்கு எழுதின கதை!.. அதிர்ச்சி தகவல் கொடுத்த பத்திரிக்கையாளர்!…
Published on
By
முன்பெல்லாம் வருடத்திற்கு 2 படங்கள் நடித்து வந்த நடிகர் விஜய் போக போக வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க துவங்கினார். எப்போதும் பொங்கலுக்கு ஒரு படம் அதன் பிறகு வருட கடைசியில் ஒரு படம் என வருடத்திற்கு இரண்டு விஜய் படங்கள் வந்துவிடும்.
தற்சமயம் அதே போல மீண்டும் வரிசையாக படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்த படம் இயக்குனர் வெங்கட்பிரபு கூட்டணியில் என அறிவித்துள்ளார். வருகிற ஜூலை முதல் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் எந்த படத்திலும் நடித்ததில்லை.
எனவே இது ஒரு புது காம்போ என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான கதை ஏற்கனவே எழுதப்பட்டது என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறுகிறார். மாநாடு படத்தை வெங்கட் பிரபு எடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு வெகுவாக நஷ்டமானது. மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் முடிக்க முடியவில்லை. எனவே இந்த இடைவெளியில் ஒரு வெப் சீரிஸ் எடுக்கலாம் என யோசித்தார் வெங்கட்பிரபு. இதற்காக ஒரு கதையையும் எழுதினார். சிம்புவிற்கு அந்த கதை பிடித்திருந்தது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பொறுமையாக மாநாடு படத்தை இயக்கி கொள்வோம் என கூறிவிட்டார். அதனையடுத்து அந்த கதையை படமாக்கவில்லை. பிறகு அந்த கதையைதான் தற்சமயம் விஜய்க்கு ஒதுக்கியுள்ளார் வெங்கட்பிரபு என கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.
இதையும் படிங்க: இளையராஜாவால எங்க அம்மாக்கிட்ட அடி வாங்கியிருக்கேன்… சிறு வயதிலேயே மிஸ்கின் செய்த காரியம்!..
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...