Categories: Cinema News latest news

மும்பைக்கு முடக்கு போட்டு சென்னைக்கு திரும்புகிறது ’ஜவான்’ படக்குழு…! விஜய் செய்யும் காரியம் அப்படி…

அட்லீ இயக்கும் புதிய படம் ஜவான். பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஷாரூக்கான், நடிகை நயன்தாரா நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடந்து வ்ருகின்றன.

இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ஷாரூக்கானின் கோரிக்கையை ஏற்று படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிகர் விஜய் நடிக்கப் போவதாக தகவல் வெளிவருகிறது..

அதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் சென்னைக்கு திரும்புவதாக செய்திகள் வலம் வருகிறது. ஏனெனில் இந்த படத்தில் விஜய் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லையாம். அதனால் அவரை கௌரவிக்கும் விதமாக இங்கு வந்து படப்பிடிப்பை நடத்துவதாக தெரிகிறது.

மேலும் ஒரே ஒரு நாள் தான் விஜய் தேதி கொடுத்துள்ளாராம் ஜவான் படத்திற்காக. மேலும் ஷாரூக்கானின் மீதுள்ள மரியாதை அவரின் பாசமிகு தம்பியாக கருதும் அட்லீ இவர்களுக்காக இந்த படத்தில் நடிப்பதாக தெரிகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini