விஜய் இதுவரை பேட்டி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா? அட இப்பதானே தெரியுது!
தவெக தலைவர் விஜய் அரசியல் களத்துக்கு வந்ததுல இருந்தே ஊடகங்களில் பேசுபொருளாகி விட்டார். ஆனால் இதுவரை பேட்டி தான் கொடுக்கல. ஆனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம். ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு செய்தியை வெளியிடுகின்றன. இதன் பின்னணி குறித்து பிரபலம் ஒருவர் இப்படி சொல்கிறார்.
பொதுவாக தேர்தல் என்றாலே மக்கள் பரபரப்பாகி விடுவாங்க. அவர்களைத் தாண்டி ஊடகங்கள் பரபரப்பாகிடுவாங்க. எப்பவும் 2 முனை போட்டி பலமா இருக்கும். அதையும் தாண்டி 3முனை போட்டின்னா அந்தக் கட்சி ஏதோ ஒரு வகையில மக்களுக்காக போராடி இருப்பாங்க. ஆனா தவெக என்ற ஒரு கட்சி திடீர்னு தோன்றியது. அங்கு எந்த வித அரசியல் அறிவும் இல்லாத கட்சி. செங்கோட்டையன் மாதிரி விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். அவரே சைலண்ட் மோடுல தான் இருக்காரு. அதைத் தவிர்த்துட்டுப் பார்த்தா அது ஒரு கட்சியான்னே கேள்வி எழுகிறது.
ரஜினி ஏறத்தாழ 50 ஆண்டுகள் சினிமாவில இருக்காரு. அவருக்கிட்ட போய் மைக்கை நீட்டி கேட்டா அவருக்கு என்ன தெரியுதோ அதைச் சொல்வாரு. ஒண்ணுமே இல்லன்னாலும் நோ கமெண்ட்ஸ் என்பார். ஊடகவியலாளர்களைப் பார்த்து கார் கண்ணாடியை இறக்கிய விஜய்னு செய்தி போடுறாங்க. இதெல்லாம் பார்த்தா எவ்வளவு வெட்கங்கெட்ட விஷயத்தைப் பண்ணக்கூடிய ஊடகமா இருக்கு. ஊடக அரண்ணா குறைந்தபட்ச நியாயம் இருக்கணும்.
இன்றைய கருத்துக்கணிப்பில் மோடியைத் தூக்கிப் பிடிக்கும் நிறுவனம் தான் தவெக ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்கிறது. ஒரு ஊடகம்னா தன்னை மதிக்கிறவனைக் கொஞ்சமாவது மதிக்கணும். விஜய் இதுவரைக்கும் எந்த ஒரு நாளிதழ், மாத இதழுக்கும் விஜய் பேட்டி கொடுக்கல. அப்படின்னா ஏன் இப்படி செய்றாருன்னா நீ எல்லாம் எனக்கு ஆள் கிடையாதுய்யா என்கிற எண்ணம் தான். அப்படின்னா ஊடகங்கள் ஏன் இவருக்குக் கொடி பிடிக்கிறாங்கன்னா எல்லாம் பணம்தான்.
மக்கள் இந்த ஊடகங்கள் சொல்றதை எல்லாம் வச்சிக்கிட்டு இதெல்லாம் உண்மையான்னு நம்பக் கூடாது. விஜய் வேலை என்னன்னா இளைஞர்களைக் கொஞ்சம் கூட சிந்திக்க விடாம, தான் ஒரு ஆள் ஆட்சிக்கு வரணும்கறதுக்காக பல குடும்பங்களைப் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் சிதைத்த மோசமான இடம் விஜய்க்கு உண்டு. அவரை இனம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டிய வேலை, தேவை எல்லாம் இருக்கு. ஒரு அரசியல் தலைவன்னா உங்க அறிவை மேம்படுத்துனா அவன் உண்மையான தலைவன்.
உங்க சமூக அந்தஸ்தை மேம்படுத்துனா அவன்தான் உண்மையான அரசியல் தலைவன். மாறாக, உங்களுடைய அறிவை சிறுமைப்படுத்தி, உங்க மூளையைப் பிறழ்வு ஏற்படச் செய்தால் அவன் நல்ல அரசியல் தலைவன் கிடையாது. அவன் ஒரு மோசமான அரசியல் தலைவன். அவனுக்கு மக்களைப் பத்தின எந்த அக்கறையும் கிடையாது.
தான் மட்டும் தான் இருக்கணும். மத்தவங்க அடிமையா இருக்கணும் என்கிற மோசமான மனநிலையில் இருப்பவனால மட்டும்தான் இப்படி உருவாக்க முடியும். அறிவாளிகளை உருவாக்காத, சிந்திக்க விடாத விஜய் எப்படிப்பட்டவர்னு நீங்களே முடிவு பண்ண வேண்டிய தருணம்தான் இது. வாக்கு எண்ணிக்கை வரட்டும். இன்னும் 2 நாள் தான் இருக்கு. பார்ப்போம் என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
