
Cinema News
மகன் விஜய்க்கு பால் பாக்கெட் வாங்க காசு இல்லாமல் தவித்த எஸ்.ஏ.சி!.. இவ்வளவு நடந்திருக்கா!..
Published on
By
தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கிய புரட்சி இயக்குனர் என அழைக்கப்பட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 80களில் ஒரு முக்கியமான இயக்குனராக வலம் வந்தவர். ஒரு நல்ல வாய்ப்பில்லாமல் தவித்து வந்த விஜயகாந்துக்கு ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தவர்.
விஜயகாந்தை வைத்து 17 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். ராதிகாவை வைத்து இயக்கிய நீதியின் மறுபக்கம் படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியை வைத்து இவர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தமிழ் மட்டுமில்லாமல் நிறைய தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களையும் எஸ்.ஏ.சி இயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: உங்களுக்கு மொத்தம் எத்தனை புருஷன்கள்?!.. கோபப்படாமல் கூலாக பதில் சொன்ன அம்பிகா…
அவரின் மகன் விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது அவரின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த பணத்தை போட்டு நாளைய தீர்ப்பு, ரசிகன், மாண்புமிகு மாணவன், செந்தூர பாண்டி, தேவா என சில படங்களை இயக்கினார். விஜயின் விஸ்வரூப வெற்றிக்கு பின்னால் இருந்தவர் இவர்தான்.
விஜய்க்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்தார். அவரை ஒரு ஸ்டாராக மாற்றியவர் இவர்தான். ஆனால், இதே எஸ்.ஏ.சியை ஒரு கட்டத்தில் ஒதுக்க துவங்கினார் விஜய். அதோடு, அவருடன் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க!.. புளூசட்டமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் ஆண்டனி..
எஸ்.ஏ.சி உதவி இயக்குனராக வேலை செய்தபோது மிகவும் வறுமையில் வாடினார் என்பது பலருக்கும் தெரியாது. ஷோபாவை காதல் திருமணம் செய்து கொண்டு மகன் விஜய் பிறந்திருந்த நேரம் அது. கையில் கொஞ்சம் கூட பணம் இல்லை. மகன் விஜய்கு பால் வாங்க 20 ரூபாய் கூட அவரிடம் இல்லை. எனவே, அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகரிடம் சென்று 20 ரூபாய் கேட்டிருக்கிறார்.
‘ஷூட்டிங்ல இருப்பேன். அங்க வாங்க’ என அந்த நடிகர் சொல்ல அங்கும் போயிருக்கிறார் எஸ்.ஏ.சி. காலை முதல் மாலை வரை படப்பிடிப்பில் காத்திருந்தும் அந்த நடிகர் பணம் கொடுக்கவில்லை. வெறுத்துப்போன எஸ்.ஏ.சி வீட்டிற்கு வந்திருக்கிறார். அதற்குள் ஷோபா அருகே குடியிருந்த ஒருவரிடம் பணம் வாங்கி விஜய்க்கு பால் ஊட்டியிருக்கிறார். இப்படியெல்லாம் கஷ்டப்பட்ட எஸ்.ஏ.சிக்கு இயக்குனர் ஆன பின் அவரின் வறுமை முடிவுக்கு வந்தது.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...