">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எஸ்.ஏ.சியிடம் விஜய் பேசுவதில்லை – பகீர் தகவலை கூறிய ஷோபா சந்திரசேகர்
எஸ்.ஏ.சியிடம் விஜய் பேசுவதில்லை – பகீர் தகவலை கூறிய ஷோபா சந்திரசேகர்
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் தந்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தார். அதில் பொருளாளராக விஜயின் அம்மா ஷோபா பெயர் இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், எனது கணவர் துவங்கியுள்ள கட்சியில் பொருளாளராக நான் இல்லை. அதிலிருந்து விலகி விட்டேன் என ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் கட்சி பற்றி எதுவும் பேச வேண்டாம் என விஜய் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் என் கணவர் செயல்படுவதால் விஜய் அவரிடம் பேசுவதில்லை. என்னிடம் கட்சி தொடங்குவது பற்றி எதுவும் சொல்லாமல் எனது கணவர் கையெழுத்து வாங்கிக்கொண்டார். அந்த கையெழுத்தை நான் திரும்ப பெறுகிறேன் என அவர் கூறியுள்ளார்.