Connect with us

latest news

ரோகிணிக்கு விஜயா வைத்த சூப்பர் செக்.. ராதிகாவை விளாசிய இனியா.. தங்கமயிலின் திட்டம்!..

Vijay tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்பு.

பாக்கியலட்சுமி: காலையில் ராதிகாவிடம் கோபி பாக்கியாவிடம் சண்டை இட்ட வீடியோவை அவருடைய அம்மா காட்டுகிறார். இதைப் பார்த்து கோபப்படும் ராதிகா யாராயிருந்தாலும் பாக்கியா போல தான் நடந்திருப்பாங்க.

இதையும் படிங்க: கங்குவா போட்ட போடு!.. கண்ணுலையே கலவரம் தெரியுதே?!.. ஆர்.ஜே பாலாஜி என்ன சொல்லிருக்காரு பாருங்க

அதுக்கு நீங்க அவங்க கிட்ட போய் சண்டை போடணுமா என்ன திட்டுகிறார்.
இனியா காலேஜில் இருக்கும் போது எல்லோரும் கோபி மற்றும் பாக்கியா சண்டை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் மாற்றி மாற்றி அதையே பேச இனியா வீட்டிற்கு வந்து விடுகிறார்.

பாக்கியாவிடம் நீங்கள் இருவரும் சண்டையிட்டு கொள்கிறீர்கள். எங்கள பத்தி நினைக்கவே மாட்றீங்க என்கிறார். ராதிகா வீட்டிற்கு வரும் இனியா கோபியை கேட்கிறார்.

ஆனால் ராதிகாவின் அம்மா பாக்கியாவை தவறாக பேச இனியா ராதிகா வந்ததால் தான் குடும்பம் இப்படியானதாக பேசி விடுகிறார். பின்னால் வரும் ஜெனியிடம் இதைக் கூற அவரும் இதே கூறுகிறார்.

சிறகடிக்க ஆசை: விஜயா மீனாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூற இனி அவங்க குடும்பத்தை திருட்டு குடும்பம் சொல்ல கூடாது என்கிறார். அண்ணாமலை உன்னால் தான் அவர்களுக்கு கஷ்டம்.

நீதான் அந்த அஞ்சு லட்சத்தை கொடுக்கணும். உன் புருஷனா நானும் அதற்கு பங்கு எடுத்துக்கிறேன். வேலைக்கு போகப் போகிறேன் எனக் கூறுகிறார்.

மனோஜிடம் வரும் விஜயா அவரிடம் பணம் கேட்க தன்னிடம் இல்லை என கூறி விடுகிறார். ரோகிணியிடம் கேட்க அவரும் அதையே கூற அப்போ மலேசியா செல்லலாம் என பிடிவாதமாக இருக்கிறார்.

இதனால் ரோகிணி தானே அதை தருவதாக கூறுகிறார். சரி என கூறும் விஜயா 2 லட்சத்துக்கு போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் எனக் கூறுகிறார்.

இதையும் படிங்க: Vijay: தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு தடபுடல் விருந்து… அசத்தும் விஜய்!

மனோஜிடம் ஜீவா கொடுத்த காசை கேட்க அது மொத்தமாக செலவாகிவிட்டதாக மனோஜ் கூறுகிறார். வித்யாவிடம் இது குறித்து பேசிக் கொண்டிருக்கும் ரோகிணிக்கு எதிராக வித்யா இதுதான் கர்மா போலருக்கு என கலாய்க்கிறார்.

நீ ரெண்டு லட்சத்தை ஏமாத்த நினைச்ச இப்போ அஞ்சு லட்சம் கொடுக்க வேண்டி இருக்கு என்கிறார். போலீஸ் கேஸ் ஆகாமல் இருக்க பார்வதியை சந்தித்து அந்த பணத்தை வேறு வழியில் ரோகிணியே கொடுக்க திட்டம் தீட்டுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்2: ராஜியின் புகைப்படம் பேப்பரில் வந்திருப்பதாக பாண்டியன் கேட்க அது தான் இல்லை என மறுத்து விடுகிறார். அவருக்கு மீனாவும் சப்போட்டாக பேச குழலி அது ராஜிதான் என அடித்து பேசுகிறார்.

உடனே ராஜி குழலிக்கும் அவருடைய கணவருக்கும் எதுவோ பிரச்சனை என விஷயத்தை மடைமாற்றி விடுகிறார். இதனால் குழலி அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகிறார்.
ராஜி மற்றும் கதிர் இருவரும் கண்ணன் விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நகை விஷயத்திற்காக சரவணனும், தங்கமயிலும் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் கதை போல கவரிங் விஷயத்தை கூறுகிறார். ஆனால் அதற்குள் சரவணனுக்கு கால் வந்து விடுகிறது. வீட்டில் ஃபங்ஷனுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top