">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விஜய் சேதுபதிக்கு ரொம்ப பெரிய மனசு!.. ஜனநாதன் குடும்பத்திற்கு செய்த உதவியால் நெகிழும் திரையுலகம்….
விஜய் சேதுபதிக்கு ரொம்ப பெரிய மனசு!.. ஜனநாதன் குடும்பத்திற்கு செய்த உதவியால் நெகிழும் திரையுலகம்….
தமிழில் இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜனநாதன். கம்யூனிச சிந்தாந்தத்தில் ஈடுபட்டுள்ள அவர் தனது திரைப்படங்களிலும் அதை பிரதிபலித்து வந்தார். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வீட்டிற்கு சென்ற ஜனநாதன் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். அதைக்கண்ட அவரின் உதவியாளர்கள் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அப்போது அந்த செய்தி கேட்டு விஜய்சேதுபதிதான் கதறி அழுதுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி ஜனநாதன் இயக்கத்தில் 2 படங்களில் நடித்தவர். முதலில் புறம்போக்கு எனும் பொதுவுடைமை, தற்போது லாபம் படத்தில் நடித்து வந்தார். ஜனநாதனை சொந்த அண்ணன் போல் பாவித்தவர். ஜனநாதன் மருத்துவமனையில் இருந்த போது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையிலேயே இருந்தார். அதோடு, மருத்துவமனையில் சிகிச்சைக்கான மொத்த செலவையும் ஏற்றார். இதனால் ஜனநாதனின் குடும்பத்திற்கு பெரிய சுமை குறைந்தது. ஜனநாதன் இறந்தன் பின் அவரின் புகைப்படத்தை பகிர்ந்து ‘லவ் யூ சார்’ என விஜய்சேதுபதி பதிவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.