Connect with us
serials

latest news

அம்மா, கிரிஷை வீடு மாற்றிய ரோகிணி… கோபியை கேள்வி கேட்ட இனியா… உண்மையை உடைத்த தங்கமயில்…

VijayTV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்பு.

பாக்கியலட்சுமி: கோபி மற்றும் இனியா பேசிக் கொண்டிருக்க ரெஸ்டாரண்டில் நீங்கள் செய்த விஷயத்தால்தான் இவ்வளவு பிரச்சனை வந்ததாக கூறுகிறார். மேலும் ராதிகாவின் அம்மா தன்னிடம் கேள்வி கேட்டதால்தான் அவங்களையும் நான் தேவையில்லாமல் பேசி விட்டதாக இனியா சொல்லி வருத்தப்படுகிறார்.

இதையும் படிங்க: சூர்யா படங்களின் தொடர்தோல்விக்கு என்ன காரணம்..? பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

இனியாவின் அதிரடி கேள்விகளால் கோபி வாயடைத்து நிற்கிறார். உங்களால இங்கு எல்லாருடைய சந்தோஷமும் போச்சு என இனியா அழுது கொண்டிருக்கிறார். ராதிகா கோபிக்கு கால் செய்து பார்க்க அவர் எடுக்காமல் இருக்கிறார். பாக்கியா இனியாவிற்காக கால் செய்ய அவரும் பேசவில்லை. வீட்டில் ஈஸ்வரி கேஸ் விஷயமாக என்ன யோசித்திருக்கிறாய் என கேட்க என் முடிவில் மாற்றமில்லை என்கிறார் பாக்கியா.

சிறகடிக்க ஆசை: ரோகிணி அம்மா மற்றும் கிறிசை சென்னைக்கு அழைத்து வந்து தனியாக வீடு பார்த்து வைத்து விடுகிறார். பின்னர் கிறிசின் ஸ்கூலுக்கு செல்ல அதே ஸ்கூலில் அண்ணாமலை வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இருவரும் ஒவ்வொரு பக்கம் நின்று ஸ்கூலில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கும் இந்த உறவுதான்… கொந்தளித்த மோகினி டே…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2: ராஜி மற்றும் மீனா இருவருக்கும் தங்க மயிலின் உண்மை தெரிந்து விட தாங்கள் திருமணத்தில் செய்த எல்லா விஷயங்களையும் அவர்களிடம் சொல்லி விடுகிறார் தங்கமயில். இதை கேட்ட மீனா அதிர்ச்சியாக நிற்க ராஜி நம்ம வீட்ல இதெல்லாம் பார்க்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் இத நீங்க சொல்லி இருக்க கூடாது என்கிறார்.

இருந்தும் உங்க வாழ்க்கையில எங்களால எந்த பிரச்சினையும் வராது. இந்த விஷயம் இந்த மூலமா வெளிய வராது என சொல்லி விடுகிறார். இதைத்தொடர்ந்து மூவருக்கும் நல்ல முறையாக தாலி பிரித்து கூறும் நிகழ்ச்சி நடந்து முடிகிறது. எல்லோரும் தம்பதிகளை ஆசீர்வாதம் செய்கின்றனர். கோமதி அம்மா வெளியில் நிற்க ராஜி மற்றும் கதிர் இருவரும் வர அந்த நேரத்தில் வெற்றிவேல் வந்து தன் மகளை பார்த்து கலங்கி நிற்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top