Connect with us
Serials

latest news

மீண்டும் சிக்குவாரா ரோகிணி… கோபிக்கு நேர்ந்த ஆபத்து… குழலி பிரச்னைக்கு இறங்கும் பாண்டியன்

VijayTV: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: வித்யா முத்துவின் போனை கடலில் தூக்கிப் போட செல்லும்போது செருப்பு அறுந்து விடுகிறது. அப்பொழுது முத்துவிற்கு தெரிந்த வயதான தம்பதியிடம் செருப்பை தாய்க்கும் வித்யா, ஆட்டோவில் ஏறும்போது முத்துவின் போனை தவற விட்டுவிடுகிறார். அதை பாட்டி எடுத்து வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: கங்குவா தோல்வியால் மாமனாரின் பேச்சையே மீறிய ஜோதிகா… வைரலாகும் வீடியோ!..

பின்னர் அவர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது ரோகிணி கால் செய்து போனை போட்டு விட்டாயா எனக் கேட்க போன் தொலைந்து விட்டதை தெரிந்து கொள்கிறார் வித்யா. இருந்தும் ரோகிணியிடம் சொல்லாமல் போட்டுவிட்டேன் எனக் கூறி விடுகிறார். இதைத் தொடர்ந்து மனோஜின் கடையில் மந்திரித்த முட்டை இருப்பதை பார்த்து அவருடைய நண்பர் பதறி அடித்து ஓடுகிறார். பின்னர் அவர் ஜோசியர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல அவர் பரிகாரம் ஒன்றை சொல்கிறார்.

பாக்கியலட்சுமி: காரில் சென்று கொண்டிருக்கும் கோபிக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. இதைத் தொடர்ந்து ராதிகாவுக்கு கால் செய்ய அவர் எடுக்காமல் இருந்து விடுகிறார்.  தன்னுடைய நண்பர் செந்திலுக்கு கால் செய்ய அவரும் எடுக்கவில்லை என்பதால் செழியனுக்கு கால் செய்கிறார். அவர் எடுக்காமல் போக பாக்கியாவிற்கு கால் செய்கிறார்.

பாக்கியா எடுக்காமல் இருக்க அவருக்கு ஒரு வாய்ஸ் மெயிலை அனுப்பிவிட்டு பின்னர் கால் செய்யும்போது பாக்கியா பதறி போனை எடுக்கிறார். எங்க இருக்கீங்க என கேட்க காரில் இருப்பதாகவும் நெஞ்சுவலி வந்து விட்டதாகவும் கூறி கோபி மயங்கி விடுகிறார். கோபியை தேடி கண்டுபிடிக்கும் பாக்கியா ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து கோபியை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் நடிகர் பேத்தியின் திருமணம்!. அடேங்கப்பா இம்புட்டா!. உடம்பு முழுக்க தங்கம்தான்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2:  குழலி தன் மாமியார் மற்றும் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி அழுது கொண்டிருக்கிறார். இதைக் கேட்கும் குழலியின் தம்பிகள் குதித்து எழுந்து உடனே போய் நியாயம் கேட்க வேண்டும் என சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கோமதி அவர்களை அமைதியாக சொல்லிவிட்டு பாண்டியனை குழலி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பழனியை அழைத்துக்கொண்டு பாண்டியன் சம்பந்தி வீட்டிற்கு செல்ல அங்கு அவரை குழலி மாமியார், கணவர் மற்றும் மாமனார் வரவேற்று அமர வைக்கின்றனர்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top