Connect with us

latest news

ராமமூர்த்தியால் கலங்கும் குடும்பம்… விஜயாவிடம் சிக்கிய மீனா.. மகன்களை கண்டிக்கும் கோமதி

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் விஜயாவிற்கு பிரியாணி வாங்கிக்கொண்டு செல்கிறார் மீனா. டான்ஸ் வகுப்பில் இருக்கும் மாணவர்களை சாப்பிட அனுப்பிவிட்டு விஜயா உக்காருகிறார். அதில் இருக்கும் காதல் ஜோடிகள் வெளியில் சென்று ஊட்டிக் கொள்கின்றனர். ஏன் வீட்டில் சமைக்கலையா என விஜயா கேட்க, பூக்கட்ட நேரம் ஆகிவிட்டதாக கூறுகிறார்.

வழியில் போலீஸ் செக்கிங் முத்து நிற்க அங்கு வரும் சத்யா மாட்டிக் கொள்கிறார். அவரிடம் சரக்கு பாட்டில்கள் இருக்க அது குறித்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். பின்னர் வீட்டிற்கு வரும் விஜயா நெஞ்செரிச்சல் என கூற ரோகிணி அவருக்கு சீரகத் தண்ணீர் தருகிறார். வீட்டில் எடுத்துட்டு போன சாப்பாட்டை ஏன் சாப்பிடல என அண்ணாமலை கேட்க மீனாதான் பிரியாணி வாங்கி கொடுத்ததாக கூறுகிறார்.

இதையும் படிங்க: கோட் கிளைமேக்ஸில் தோனியும், விஜயும் ஒரு செம சீன்!.. ஆனா நடக்காம போச்சே!…

வீட்டில் இருந்து எடுத்து போன சாப்பாட்டை தான் தானம் கொடுத்த விஷயத்தை கூற முத்து சந்தோஷப்படுகிறார். பின்னர் மனோஜ் தனக்கு வந்த லெட்டரை விஜயாவை எழுப்பி மாடிக்கு அழைத்து சென்று காட்ட அதை படித்து அவர் அதிர்ச்சியாகி விடுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியை தங்கள் வீட்டுக் அழைத்து செல்ல ஜோசப் மற்றும் மரியம் கேட்கின்றனர். ஆனால் ஜெனி அதற்கு மறுத்து விடுகிறார். வீட்டில் இருப்பவர்கள் ஹாலில் பாய் போட்டு படுத்துக்கொள்ள எழில் தாத்தாவின் சேரில் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறார். காலை பாக்கியா எழுந்து வருகிறார்.

அவரும் ராமமூர்த்தியின் சேரை பார்க்க அதில் அவர் இருப்பது போல தெரிகிறது. இதை பார்த்து பாக்கியா கண்கலங்குகிறார். எல்லோரும் சுடுகாட்டிற்கு சென்று ராமமூர்த்தியின் அஸ்தியை வாங்கிக் கொள்கின்றனர். கோபி தனியாக தனக்கும் கொஞ்சம் அஸ்தி எடுத்துக் கொண்டு செல்கிறார்.

இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் ராஜி மற்றும் மீனாவிடம் செந்தில் மற்றும் கதிர் இருவரும் பேசாமலே இருக்கின்றனர். இது குறித்து கோமதி அவர்களை அழைத்து சமாதானமாக பேசி சரி செய்ய முயலுகிறார். சரவணன் தம்பிகள் வாங்கிய பணத்தை கொடுக்க தெரிந்தவர்களிடம் கடனாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வரும் தங்கமயில் தன்னுடைய நகையை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்க வேண்டாம் என்கிறார் சரவணன். இதை கேட்டு தங்கமயில் நிம்மதியடைகிறார். பாண்டியனிடம் பேச மீனா முயலும் போது அவர் மூஞ்சை திருப்பிக் கொண்டு செல்ல மீனா கவலையுடன் நடந்து செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top