Connect with us

latest news

மனோஜின் திருட்டுத்தனம்… பாண்டியனால் கடுப்பாகும் மீனா… பாக்கியாவிடம் சண்டைக்கு நிற்கும் செழியன்

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்களில் இன்று நடக்க இருக்கும் தொகுப்புகள்.

பாக்கியலட்சுமி: கோபியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து செல்ல காவல் அதிகாரிகள் வந்து நிற்கின்றனர். அவர் வர மாட்டேன் என முரண்டு பிடிக்க விசாரணை தான். அங்கே வந்து எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளுங்கள் என்கிறார். அந்த நேரத்தில் செழியன் வர எதற்கு எங்க அப்பாவை கூப்பிட்டு போறீங்க என சண்டைக்கு நிற்கிறார்.

இதையும் படிங்க: சூர்யாவை ஜீரோ ஆக்கிய ஜோதிகா.. கங்குவா படத்திற்கு மட்டும் பொங்கி எழுந்தது ஏன்?

பாக்கியா ரெஸ்டாரண்டில் நடந்த சம்பவத்திற்கு தான் போலீஸ் வந்து இருப்பதாக கூறுகின்றனர். பின்னர் கோபியை ஜீப்பில் அழைத்து சென்றுவிட செழியன் வீட்டில் பாக்கியாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியும் போலீஸிடம் சென்றது தப்பு எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் எழில் வந்து பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

நீ அம்மா மேல பாசம் இருக்க மாதிரி பேசாத என செழியன் கூற பட பூஜையில் கோபி நடந்தக்கொண்ட விஷயங்களை எழில் உடைத்து விடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாக நிற்கின்றனர்.

சிறகடிக்க ஆசை: மனோஜ், ரோகிணி மற்றும் விஜயா வீட்டிற்கு வர மேக்கப்பில் இருக்கும் மீனாவை அடையாளம் தெரியாமல் முத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் மீனாதான் என தெரிந்ததும் ஆச்சரியத்தில் வாயை பிளந்து விடுகின்றனர். அதைத்தொடர்ந்து மனோஜின் கடையில் விளம்பர படப்பிடிப்பு எடுக்க முடிவெடுக்கின்றனர்.

இதையும் படிங்க: புஷ்பானா பேரு இல்ல!… புஷ்பானா பிராண்டு!… செம மாஸா தெறிக்கவிட்ட புஷ்பா 2 டிரைலர்!…

பெரிய கான்ட்ராக்ட் கொடுத்த முதலாளி கால் செய்து உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் தான் நடிக்க வேண்டும். அவர்கள் ஆளுக்கு 25 ஆயிரம் என இரண்டு லட்ச ரூபாய் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறுகிறார். ஆனால் மனோஜ் இதை கொடுக்க வேண்டாம் என முடிவு செய்கிறார். வீட்டில் இருப்பவர்களை நடிக்க அழைக்க முத்து இதனால் எனக்கு என்ன லாபம் எனக்கு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் பாண்டியன் பேசியதை நினைத்து மீனா வருத்தப்பட்டு அமர்ந்திருக்கிறார். அங்கு வரும் செந்தில் மீனாவை சமாதானப்படுத்த ஏன் மாமாவிடம் எதுவும் கேட்கவே இல்லை என செந்திலிடம் சண்டை போடுகிறார். பின்னர் மீனா தூங்கிவிட செந்தில் இரவு முழுவதும் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

காலையில் எழுந்ததும் எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செந்தில் எக்ஸாமுக்கு கிளம்ப, அப்பொழுதும் பாண்டியன் அவர் மனம் நோக்கும்படி பேசி அனுப்புகிறார். ஆனால் வெளியில் வரும் பாண்டியன் பழனியுடன் செல்லும்போது மீனாவின் அப்பாவை பார்த்து தன் மகன் குறித்து பெருமையாக பேசுகிறார். நண்பர்களுடன் பேசிக் கொண்டு செல்லும் ராஜி பழைய காதலன் கண்ணனை பார்த்து விடுகிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top