38 ஆண்டுகள் நிறைவு செய்த பூந்தோட்ட காவல்காரன்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். 80 90களில் ரஜினிக்கு இணையான ரசிகர்களை கொண்டவர் இவர். குறிப்பாக பி அண்ட் சி செண்டர்களில் ரஜினியை விட விஜயகாந்திற்கே ரசிகர்கள் அதிகம். திரையுலகிற்கு புதிய இயக்குனகளை அதிக அறிமுகம் படுத்திய பெருமை விஜயகாந்திற்கு உண்டு.
விஜய்காந்த் நடிப்பில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான படம் பூந்தோட்ட காவல்காரன். விஜயகாந்த் நண்பரும் தயாரிப்பாளருமான அ.செ.இப்ராகிம் ராவுத்தார் த்யாரிப்பில் வெளியான இப்படத்தை செந்தின் நாதன் இயக்கியிருந்தார். இது அவருக்கு முதல் படம்.இந்த படத்தில் விஜயாஅந்துடன் ராதிகா, ஆனந்த், வாணி விஸ்வநாத், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல்ர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் குறிப்பாக சிந்திய வெண்மணி, பாராமல் பார்த்த நெஞ்சம், கான கருங்குயிலே ஏன அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன.

பூந்தோட்ட காவல்காரன் படம் தயாரானவுடன் இப்படத்தை வாங்க யாரும் முன் வரவில்லையாம். அட்வான்ஸ் கொடுத்தவர்கள் கூட பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனை கேள்விபட்ட இளையராஜா படத்தை பார்த்து தனது பின்னணி இசையால் மேஜிக் செய்தார். படம் வெளியாகி 175 நாட்கள் ஓடியது.
இந்த படம் கடந்த 1988ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி வெளியானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது
