இந்த ஆண்டு சூர்யாவோட ஆண்டு!.. அடுத்த 150 கோடி படமாக மாறிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!..

 
vas

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான 4 நாட்களிலேயே ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

vass

சூர்யாவின் முந்தைய படமான ‘கருப்பு’ பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய அந்த திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடியை கடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் தற்போது ரூ.150 கோடியை கடந்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘கருப்பு’ படத்தின் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இதே வேகத்தில் தொடர்ந்து படம் வசூல் செய்தால் ரூ.250 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ‘கருப்பு’ படத்தின் வசூலை முறியடிப்பது இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும் சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றொரு முக்கியமான படமாக மாறியுள்ளது.

Tags

From Around the web