குஷ்பு வீட்டு கல்யாணத்தில் என்ன நடந்தது? உடனே திரும்பிய பாக்கியராஜ்!

 
bhagyaraj

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இறந்த பிறகு மீண்டும் ஒரு சாம்ராஜ்யம் சரிந்திருக்கிறது. இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக தன்னுடைய 73 வது வயதில் மரணம் அடைந்திருக்கிறார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 

kushbhoo daughter

பாக்கியராஜின் உடல் நாளை மதியம் ஒரு 1:30 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் பாக்கியராஜ் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்து நடிகை சுஹாசினி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது நாங்க எல்லாரும் குஷ்பு வீட்டு கல்யாணத்தில் கோவாவில் கலந்து கொண்டோம். அந்த திருமண நிகழ்ச்சியில் பாக்கியராஜ் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தார். நாங்க எல்லாரும் நேத்து தான் வீட்டுக்கு திரும்பி வந்தோம். ஆனால் அவர் முந்தின நாளே வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார். அவர் வந்த பிறகு இப்படி அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்த வருவோம் என்று நாங்க கொஞ்சம் கூட எதிர்பாக்கல என படபடப்போடு பேசினார் சுஹாசினி.

bhagyaraj

அப்போது அவரது அருகில் நின்று கொண்டிருந்த நடிகர் பார்த்திபன் கலங்கிய கண்களோடு அழுது கொண்டிருந்தார். இந்த நிலையில் குஷ்பு வீட்டு திருமணத்தில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த மனிதன் அடுத்து இரண்டு நாட்களில் மரணித்திருப்பது ரசிகர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு வேலை அங்கு பயணம் செய்து வந்ததால் சோர்வு மற்றும் அலைச்சலால் ஏற்பட்ட உடல் ... அல்லது திருமண விருந்து உடல் உபாதையை ஏற்படுத்திவிட்டதா? என பல கோணங்களில் ரசிகர்கள் சந்தேகித்து வருகிறார்கள். 

Tags

From Around the web