Connect with us

Cinema News

என்னம்மா கண்ணு சவுக்கியமா? சத்யராஜை அசிங்கப்படுத்திய ரஜினி… தீரா பகை உருவானது எப்படி?

கோலிவுட்டில் சில நடிகர்களுக்கு இருக்கும் பனிப்போர் குறித்து பெரிதாக ரசிகர்களிடம் கசியவில்லை என்றால் கூட உள்ளே இருக்கும் பலரும் அதை அறிந்து தான் இருப்பார்கள். அதனால் தான் அந்த இரு நடிகரையும் ஒரே படத்தில் இணைக்க யாருமே துணியமாட்டார்கள். அப்படி ஒரு பிரச்னை ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜுக்கு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

இவர்களுக்கு இடையே பிரச்னை துவங்கியது என்னவோ தம்பிக்கு எந்த ஊரு படப்பிடிப்பு சமயத்தில் தான். ரஜினி அப்போதைய சமயத்தில் ரொம்பவே கலகலப்பாக பேசக்கூடியவராம். விளையாட்டாக வம்பு இழுத்து வைப்பவர். அப்படி ஒருமுறை நடிகை மாதவி சத்யராஜை பார்த்து யார் சார் அவரு என ரஜினியிடம் கேட்டு இருக்கிறார். இதற்கு ரஜினி அவரை தெரியாதா உங்களுக்கு? அவர் நியூயார்க்கில் பெரிய டீச்சர்.. நடிப்பின் ஜீனியஸ் என்று சொல்லி சென்றுவிட்டார்.

இதையும் படிங்க : நான் எவ்வளவோ கெஞ்சியும் ஒத்துக்கவே இல்லை!. அதனாலதான் அப்படி ஆச்சி!.. புலம்பும் ஜி.வி.பிரகாஷ்..

இதை தொடர்ந்து அடுத்த நாள் வந்த மாதவி, நியூயார்க்கை சேர்ந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் தடுமாறும் சத்யராஜிடம் சென்று சரளமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார். முதலில் ரஜினியின் சேட்டையை அறியாத சத்யராஜ் யெஸ் எனச் சொல்லியே சமாளித்து வந்து இருக்கிறார். 

இந்த சம்பவத்தினை பார்த்த ரஜினி ஒருபக்கம் விழுந்து விழுந்து சிரிக்க சுலோச்சனா மாதவியிடம் சத்யராஜின் நிலையையும் ரஜினியின் சேட்டையும் கூற மாதவிக்கு சிரிப்பு வந்து விட்டதாம். இதனால் ரஜினியின் மீது சத்யராஜுக்கு கோபம் உருவானது. இதை தொடர்ந்து மிஸ்டர் பாரத் படத்தின் காட்சிகள் நீளம் கருதி சத்யராஜின் காட்சிகள் கட் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : எல்லாரும் ஏமாத்திட்டாங்க!.. சரக்கடிச்சி பல நாள் ஆச்சி!.. மேடையில் புலம்பிய விமல்!…

இதற்கு ரஜினி தான் பொறாமையில் கட் செய்ததாக அவர் மீது வன்மத்தினை வளர்த்து கொண்டார் சத்யராஜ். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருந்தும் சத்யராஜ் பல மேடைகளில் ரஜினி குறித்து நிறைய பேசி இருக்கிறார்.

அப்படிதான் ஒரு முறை, காவிரி பிரச்னைக்காக நடிகர்கள் போராட்டம் செய்த போதே, ரஜினியை மனதில் வைத்து சத்யராஜ் மேடையில் பேசியது. தமிழ்நாட்டில் பிழைப்பு தேடி வந்தவர்கள் கூட கன்னட உணர்வில் தான் இருக்கிறார்கள். இங்கு சம்பாரித்து அங்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது பலரிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 30 வருடத்தில் ரஜினிக்கு சத்யராஜ் சப்போர்ட் செய்து இருப்பது இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தில் தான் என்பதே உண்மை.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top