">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்ன செஞ்சாலும் வாய்ப்பு இல்லியே… தவிக்கும் நடிகை
தமிழில் சின்னப் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் அந்த கண்ணழகி நடிகை.�
நான் தமிழ்நாட்டுப் பொண்ணு என்ற டேக் லைனுடன் மீடியாக்களில் பேச ஆரம்பித்தவருக்கு, தொடக்கத்தில் வாய்ப்புகள் குவிந்தன. அதற்கு அடுத்தபடியாக முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு நடிகையைத் தேடி வந்தது. அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நம்ம நடிகை, நல்லாவும் நடித்துக் கொடுத்தார். ஆனால், யார் கண் பட்டதோ படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.
அதேநேரம், பெரிய இயக்குனர் படத்தில் நடித்ததால், தன்னை பெரிய நடிகை என்று இவர் நினைத்துக் கொண்டார். அவர் சின்ன படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தார். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என இலவு காத்த கிளி போல் காத்திருந்ததுதான் மிச்சம். ஒரு வாய்ப்பும் வரவில்லை.
இடையே சோசியல் மீடியாக்களில் போட்டோக்கள் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தையும் அம்மணி சேர்த்திருந்தார். அதன் மூலமாவது வாய்ப்பு வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். இதனால், என்ன செஞ்சாலும் வாய்ப்புக் கிடைக்க மாட்டேங்குதே என புலம்பி வருகிறாராம். பாவம்தான்.