லாபம் படம் என்னவானது... படக்குழுவின் திடீர் அறிக்கை

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையை இயக்கி புகழ் பெற்றவர் எஸ்.பி. ஜனநாதன். இயற்கை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சொற்பமான படங்களை இயக்கி இருந்தாலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இச்சூழலில், கடைசியாக லாபம் படத்தை இயக்கி முடித்து இருந்தார். அப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கடைசி கட்ட பணிகள் நடந்து வந்தன. பட வேலைகளில் பிஸியாக இருந்தவருக்கு திடீர் என உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இதை தொடர்ந்து, லாபம் படம் என்னவாகும் எனக் கேள்வி எழுந்த நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம். இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
Saddened by #SPJananathan sir loss, Jana sir completed most of the work for #Laabam, Movie to release in Tamil & Telugu this April#MakkalSelvan @VijaySethuOffl@shrutihaasan @immancomposer @ramji_ragebe1 @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @yogeshdir @LahariMusic @proyuvraaj pic.twitter.com/afrTLfIrXR
— 7Cs Entertaintment (@7CsPvtPte) March 20, 2021
அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.