">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நயன்தாரா, விஜய் சேதுபதியோடு ஏன் நடித்தேன்… இதக்கூற பெரிய தைரியம் வேணும் சமந்தா
நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தாம் விரும்பியதாகவும், அது இப்போது ஒரே படத்தில் நிறைவேறியிருப்பதாகவும் நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.�
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துவரும் படம் `காத்துவாக்குல ரெண்டு காதல்’. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில் சமந்தா நடித்து முடித்திருக்கிறார். நானும் ரௌடிதான் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் இணைந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்திருப்பது குறித்து சமந்தா கூறுகையில், “திறமையான நயன்தாரா மற்றும் துடிப்பான விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே விரும்புவேன். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மூலம் அது ஒரே நேரத்தில் நனவாகியிருக்கிறது. இருவருடனும் ஒரே நேரத்தில் நடிக்க எனக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டது என்பதை உங்களுக்கு நான் சொல்ல முடியாது. ஷூட்டிங் பாதி முடிஞ்சிருக்கு.. எழுதி வைச்சுக்கோங்க இது மிகப்பெரிய ஹிட்டாகும். விக்னேஷ் சிவன் கலக்குகிறார்’’ என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.