">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இதனால்தான் கமல் படத்திலிருந்து விலகினேன்? – ராகவா லாரன்ஸ் விளக்கம்
இதனால்தான் கமல் படத்திலிருந்து விலகினேன்? – ராகவா லாரன்ஸ் விளக்கம்
மாஸ்டருக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு விக்ரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. அதன்பின் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்கிறார் என கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் ஏன் நடிக்கவில்லை என ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். லாரன்ஸ் தற்போது ருத்ரன் திரைப்பாத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கதிரேசன் தயாரித்து வருகிறார். அதேபோல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கால பைரவா’ என்கிற படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ளது. அதன்பின் பி.வாசுவுடன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதால் விக்ரம் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கமுடியவில்லை. எனவேதான் விக்ரம் படத்தில் நடிக்க முடியவில்லை என லாரன்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.